மேலும் அறிய

PM Sharad Pawar: சரத் பவாரால் ஏன் பிரதமராக முடியவில்லை? காரணத்தை பட்டுனு சொன்ன பிரதமர் மோடி..!

சரத் பவார் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத் பவார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1999ஆம் ஆண்டு, அக்கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர், தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். தொடக்கத்தில் சோனிகா காந்திக்கு எதிராக அரசியல் செய்தாலும் பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியுடனே கூட்டணி அமைத்து, அவருடன் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில், மகாராஷ்டிர அரசியல் நெருக்கடியின் உச்சக்கட்டமாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிளவுபட்டது.

சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியை உடைத்து, மகாராஷ்டிராவில் பாஜக அரசாங்கத்தில் இணைந்தார். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இம்மாதிரியான சூழலில், பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சரத் பவார் கலந்து கொண்டது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.

சரத் பவார் குறித்து பிரதமர் மோடி கருத்து:

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் சரத் பவார், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சரத் பவார் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் காரணமாகவே சரத் பவாரால் பிரதமராக முடியவில்லை என மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்களை நேற்று சந்தித்து பேசிய அவர், "காங்கிரஸைப் போல் பா.ஜ.க.வுக்கு அகங்காரம் இல்லை. அதனால் ஆட்சியை தக்க வைக்கும்" என்றார்.

பிரணாப் முகர்ஜியுடனான முதல் சந்திப்பு:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜியுடனான முதல் சந்திப்பு குறித்து பேசிய அவர், "உங்கள் கட்சி (பாஜக) உங்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, உங்கள் பெயரில் அறுதிப் பெரும்பான்மை பெற்றதாக அவர் என்னிடம் கூறினார். 

இது முதல் முறையாக நடந்தது. ஏன் என்றால், இதற்கு முன், பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவித்த எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை போலவே சிவசேனா கட்சி பிளவுப்பட்டதற்கும் பாஜகவே காரணம் என வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "சிவசேனாவுடனான கூட்டணியை நாங்கள் முறித்துக் கொள்ளவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல், சிவசேனா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது.

ஆனால், அவர்களின் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான 'சாம்னா' எங்கள் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்தது. ஆதாரமற்ற விமர்சனங்களை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பின. அதை நாங்கள் பொறுத்துக்கொண்டோம். நாங்கள் அதை லேசாக எடுத்துக் கொண்டோம்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget