மேலும் அறிய

Petrol Price Cut: ஆட்சிப் பொறுப்பேற்று 2 வாரத்தில் அதிரடி... பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்த ஏக்நாத் ஷிண்டே அரசு!

இதனால் மாநிலத்துக்கு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படும் என்றும் எனினும், இந்த வரிக்குறைப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியேற்று இரண்டு வார காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியின்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல்,  டீசல் விலைகளைக் குறைக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்தேறிய பல்வேறு கட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலக, ஏக்நாத் ஷிண்டே தலமையிலான அரசு பொறுப்பேற்றது.

நாளை முதல் குறையும் பெட்ரோல் டீசல் விலை

தன் பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில்,  எரிபொருள் மூதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்படும் என அதிரடியாய் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் குறைக்க இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (ஜூலை.15) முதல் மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 106 ரூபாயாகவும், டீசல் 94 ரூபாயாகவும் விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மக்களின் நலனுக்காக...

பெட்ரோல் விலைக் குறைப்புக்காக இப்பொருள்களின் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மாநிலத்துக்கு ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படும் என்றும் எனினும், இந்த வரிக்குறைப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிர மாநிலத்தின் நலன் கரித்து பாஜக -சிவசேனா தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்

 

வாட் வரியைக் குறைத்த மத்திய அரசு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 9.5உம், டீசல் விலை ரூபாய்க்கு 7உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.

அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்க வேண்டுமென நிர்மலா சீத்தாராமன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிர அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களில் வரியைக் குறைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget