மேலும் அறிய

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவாகரம் பேச அனுமதி இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்!

இந்தாண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர 23 ஆம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரைத்துள்ளது

நாடாளுமன்ற குளிர்காலத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தைப்பற்றி இம்முறை பேசுவதற்கு இடமே இல்லை என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நவி கூறியுள்ளார். மேலும் இதற்கு காங்கிரஸ் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டு பெகாசஸ் மென்பொருள் மூலமாக நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய  அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.  மேலும் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும் சென்ற முறை நாடாளுமன்ற விவாதத்தின் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சூழலில் தான், இந்தாண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர 23 ஆம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த தொடரில் கடந்த முறையைப்போன்ற பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தை மீண்டும் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

  • நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவாகரம் பேச அனுமதி இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்!

இந்நிலையில் தான் இதுக்குறித்து மாநிலங்களவை துணை தலைவரும், மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் முடிவில் அடிப்படையில் நாட்டில் தற்போது சூழலில் நிலவும் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்ற தொடர்களில் காங்கிரசின் செயல்பட்ட விதத்தைக்கவனிக்க வேண்டும் எனவும், ஜனநாயக விவாதத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெகாசஸ் விவகாரத்தில் உண்மை எதுவும் இல்லாதப்போது, விவாதத்தின் அடிப்படையில் பேசினால் பல கதைகள் தான் வளரும். இதனை வைத்து நடவடிக்கையை சீர்குலைக்க விரும்புவது நியாயமில்லை. அதனால் இந்த தொடரில் இந்த பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை. எனவே நாடாளுமன்றத்தில் இம்முறை பெகாசஸ் பற்றி பேசுவதற்கு இடம் அளிக்கப்படாது எனவும், இதனை ஒரு மனதாக அனைவரும் ஏற்றுக்கொள்ள நிலையில்,காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

  • நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவாகரம் பேச அனுமதி இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்!

இதோடு கடந்த முறை அனைத்துக் கட்சிக்கூட்டம், சபை அலுவல் குழு கூட்டம் ஆகிய நடத்தப்பட்டு பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள்  பெகாசஸ் பிரச்சனையை கையில் எடுத்துப்போராடினர். அப்போது சில மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தலை சந்தித்தன. தற்போதும் 5 மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் வர விருப்பதினால் தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். சென்ற முறைப்போன்ற இப்போதும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினால் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதால் பெகாசஸ் பற்றி பேசுவதற்கு இடமளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget