மேலும் அறிய

Omicron Cases India: : ஒமிக்ரான் தொட்டுவிட்ட இந்திய நகரங்கள்.. உஷாராகும் சென்னை - முழுத் தகவல்!

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ஒமிக்ரான் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ஒமிக்ரான் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஒமிக்ரான் திரிபு முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவியது. இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 

அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது. முதன் முதலில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்தவர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



Omicron Cases India: : ஒமிக்ரான் தொட்டுவிட்ட இந்திய நகரங்கள்.. உஷாராகும் சென்னை - முழுத் தகவல்!

தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக பெங்களூருக்கு கடந்த மாதம் வந்த 66 வயது மதிக்கத்தக்க தென்னாப்பிரிக்க நபரும் 46 வயது மதிக்கத்தக்க உள்ளூர் மருத்துவரும் வந்தனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பே இருவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் மிதமான அறிகுறிகளே அவர்களிடம் தென்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர், “தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயதுடைய நபர் தென்னாப்பிரிக்காவில் இருந்து நவம்பர் 20ம் தேதி அன்று வந்தார். அவருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை. விமான நிலையத்தில் அவருடைய மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நவம்பர் 23ம் தேதி அன்று அவருக்கு சோதனை முடிவுகள் நெகடிவ் என வந்ததும் அவர் நவம்பர் 27ம் தேதி அன்று துபாய்க்கு சென்றுவிட்டார்.


Omicron Cases India: : ஒமிக்ரான் தொட்டுவிட்ட இந்திய நகரங்கள்.. உஷாராகும் சென்னை - முழுத் தகவல்!

இரண்டாவது நபரான மருத்துவர் கொரோனா பாசிட்டிவ் வரவும் அவர் தன்னை நவம்பர் 22ஆம் தேதி தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடைய சோதனை மாதிரிகள் நவம்பர் 24ம் தேதி அன்று மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 5 நபர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையடுத்து டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று மேலும் 2 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. குஜராத்தின் ஜாம்பஜார் நகரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 72 வயதுடைய ஒருவருக்கும் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது. டெல்லியில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லையென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்படு வருகின்றனர். மாநில எல்லையான நீலகிரி பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget