மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Crime: நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. கோழிக்கோட்டில் நண்பர்கள் செய்த கொடூரம்!

கோழிக்கோடு கோவிந்தபுரத்தில் நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை கசாபா போலீசார் கைது செய்தனர்.

கோழிக்கோடு கோவிந்தபுரத்தில் நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை கசாபா போலீசார் கைது செய்தனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் சனிக்கிழமை இரவு நர்சிங் மாணவியை அவரது நண்பர்கள் இருவர் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. உயிர் பிழைத்தவரின் புகாரின்படி, அவர்கள் மது குடிக்க வற்புறுத்தியதாகவும், அதன் பிறகு இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.  

அந்தப்பெண் கல்லூரி வகுப்பில் கவனம் செலுத்தாமல், மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் கவனித்து, அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அப்போது அந்தப்பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்களே இதனை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.  இதையடுத்து கோழிக்கோடு கசாபா காவல் நிலையத்தில் இதனை பற்றி புகார் அளித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியை, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தங்கள் வாடகை வீட்டிற்கு அழைத்துள்ளனர். நண்பர்கள் தான் என்ற எண்ணத்தில் மாணவியும் சென்றுள்ளார். அங்கு அவரை மது குடிக்கும்படி இருவரும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மது அருந்தியதும் அவர் மயக்க நிலையில் இருப்பதை இருவரும் உறுதி செய்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த செவிலியர் மாணவியை அமல், அம்படி இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்க நிலையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் விழித்துள்ளார். அப்போது அமல், அம்படி இருவரும் போதையில் படுத்திருந்ததை கண்டு, தனக்கு நடந்த சம்பவத்தை பற்றி தெளிவு பெற்றார். உடனடியாக அங்கிருந்து வெளியே வந்து வேறு ஒரு நண்பரின் உதவியோடு வீட்டிற்கு சென்றுள்ளார்.  

இந்த சம்பவம் பற்றி கவுன்சிலிங் நடந்த போது கூறியுள்ளார். பின் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அமல், அம்பாடி தப்பி ஓடினர். பின்னர் இருவரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சில தினங்களுக்கு முன், திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவர்  ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்ற 42 வயதுடைய ஒரு பெண், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சுரேஷ், மீண்டும் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சுரேஷை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
Jaiswal: வெறித்தனம்! கங்காரு பாய்சை கதறவிட்ட ஜெய்ஸ்வால்! பெர்த்தில் விளாசினார் சதம்!
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
Tamilnadu RoundUp 24th Nov 2024: வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp 24th Nov 2024: வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை!
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
Driving Class: காசே இல்லாமல் கார் ஓட்ட கத்துக்கலாமா? எப்படி அப்ளை பண்றது? முழு விவரம்
Embed widget