மேலும் அறிய

Maharashtra Lathicharge: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. வர்காரியா சமூகத்தினர் மீது லத்தி சார்ஜ்.. நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

நினைவிடத்தில் வழிபாடு:

மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். ​இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின்  மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக  புனே நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலந்தி நகரில் உள்ள புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்தில், சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். 

தள்ளு-முள்ளு:

அந்த வகையில் நேற்று புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்தில் வழிபாடு நடத்த, வர்காரியா மக்கள் ஏராளமானோர் ஆலந்தி நகரில் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே நினைவிடத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கிருந்த அனைவரும் உள்ளே நுழைய முற்பட்டனர். ஒருகட்டத்திற்கு மேல் போலீசாரின் தடுப்பையும் மீறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தப்பட்டது. பின்பு லத்திகளை கொண்டு கூட்டத்தை பின்னோக்கி தள்ளி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. பந்தர்பூருக்கு செல்லும் வரி எனும் யாத்திரையின் ஒரு பகுதியாக புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்திற்கு வர்காரியா மக்கள் செல்வது என்பது நூறாண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படும் ஒரு வழக்கம். அப்படி இருக்கையில் அவர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்து தராமல், பக்தர்கள் மீது ஏக்நாத் ஷிண்டே மற்றும் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி தடியடி நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பட்னாவிஸ் பதில்:

சம்பவம் தொடர்பாக பதில் அளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கடந்த ஆண்டு ஆலந்தி நகரில் நடைபெற்ற சம்பவத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குழுவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கி நினைவிடத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்தோம். அதன்படி ஒவ்வொரு குழுவை சேர்ந்த 75 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், அந்த யாத்திரையில் பங்கேற்ற சுமார் 500 இளைஞர்கள் பாஸ் முறையை பின்பற்றாமல் உள்ளே நுழைய முயன்றனர். அங்கிருந்த தடுப்புகளையும் உடைத்தனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசார் சிலர் காயமடைந்தனர். ஆனாலும், பக்தர்கள் மீது தடியடி எதுவும் நடத்தபடவில்லை, லேசான தள்ளுமுள்ளு மட்டுமே ஏற்பட்டது” என்றும் விளக்கமளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget