மேலும் அறிய

பிரதமர் வேட்பாளர் ஆகிறேனா? பளீச் பதில் அளித்த நிதிஷ் குமார்...தேசிய அரசியலில் புதிய திருப்பம்

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டில், முதலமைச்சராக இருக்க மாட்டேன் என நிதிஷ் குமார் தெரிவித்திருந்த நிலையில், தேசிய அரசியலில் அவர் கவனம் செலுத்த உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக, எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், பிரதமர் ஆசை எல்லாம் தன்னுடைய மனதில் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு நேர்மாறான கருத்துகளை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். "நிதிஷ் குமார் பிரதமர் போட்டியில் இல்லை. ஆனால் பிரதமராக வருவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. புதிய பீகார் அரசு செயல்படத் தொடங்கியதும், இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துக்கு வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவோம்" என்றார்.

எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க எந்த மாதிரியான பங்கை வகிப்பீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் செயல்படுவோம்" என நிதிஷ் பதில் அளித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, 8ஆவது முறையாக பீகார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு பேசிய நிதிஷ், பிரதமர் மோடி குறித்து விமர்சித்திருந்தார். "அவர் (மோடி) 2014ல் வெற்றி பெற்றார். ஆனால் 2024ல் வெற்றி பெறுவாரா?" என நிதிஷ் கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் வேட்பாளராக வருவீர்களா என கேள்வி எழுப்பியதற்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார். 

"மக்கள் என்ன சொன்னாலும், எனக்கு நெருக்கமானவர்கள் என்ன சொன்னாலும், அது என் மனதில் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும், அதை உறுதி செய்வதே என்னுடைய வேலை. நாம் அனைவரும் மக்களின் பிரச்னைகள் மற்றும் சிறந்த சமூக சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசுவோம்" என்றும் நிதிஷ் கூறியுள்ளார்.

பீகாரில் மாநில சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதில், நிதஷ் குமார் தலைமையிலான மகாகத்பந்தன் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Embed widget