மேலும் அறிய

பிரதமர் வேட்பாளர் ஆகிறேனா? பளீச் பதில் அளித்த நிதிஷ் குமார்...தேசிய அரசியலில் புதிய திருப்பம்

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டில், முதலமைச்சராக இருக்க மாட்டேன் என நிதிஷ் குமார் தெரிவித்திருந்த நிலையில், தேசிய அரசியலில் அவர் கவனம் செலுத்த உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக, எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், பிரதமர் ஆசை எல்லாம் தன்னுடைய மனதில் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு நேர்மாறான கருத்துகளை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். "நிதிஷ் குமார் பிரதமர் போட்டியில் இல்லை. ஆனால் பிரதமராக வருவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. புதிய பீகார் அரசு செயல்படத் தொடங்கியதும், இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துக்கு வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவோம்" என்றார்.

எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க எந்த மாதிரியான பங்கை வகிப்பீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் செயல்படுவோம்" என நிதிஷ் பதில் அளித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, 8ஆவது முறையாக பீகார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு பேசிய நிதிஷ், பிரதமர் மோடி குறித்து விமர்சித்திருந்தார். "அவர் (மோடி) 2014ல் வெற்றி பெற்றார். ஆனால் 2024ல் வெற்றி பெறுவாரா?" என நிதிஷ் கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் வேட்பாளராக வருவீர்களா என கேள்வி எழுப்பியதற்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார். 

"மக்கள் என்ன சொன்னாலும், எனக்கு நெருக்கமானவர்கள் என்ன சொன்னாலும், அது என் மனதில் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும், அதை உறுதி செய்வதே என்னுடைய வேலை. நாம் அனைவரும் மக்களின் பிரச்னைகள் மற்றும் சிறந்த சமூக சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசுவோம்" என்றும் நிதிஷ் கூறியுள்ளார்.

பீகாரில் மாநில சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதில், நிதஷ் குமார் தலைமையிலான மகாகத்பந்தன் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget