மேலும் அறிய

Medicine Price Rise: தாறுமாறாக உயரப்போகிறதா மருந்துகளின் விலை? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!

மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Medicine Price Rise: மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. மருந்துகளின் விலை உயர்வு இந்த மாதத்துடன் (ஏப்ரல்) அமலுக்கு வரலாம் என தகவல் வெளியானது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மருந்துகளின் விலை உயர்கிறதா?

இந்த நிலையில், மருந்துகளின் விலை உயர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் பொய்யானவை என்றும் உள்நோக்கத்துடன் இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஏப்ரல் 2024 முதல் மருந்துகளின் விலை 12 சதவீதம் வரை கணிசமான அளவில் உயரும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயர்த்தப்படும் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகள் தவறானவை, உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பரபரப்பு விளக்கம்:

மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (DPCO) 2013இன்படி, மருந்துகள் இரண்டு வகைப்படும். ஒன்று பட்டியலிடப்பட்ட மருந்துகள் ஆகும். இரண்டாவது பட்டியலிடப்படாத மருந்துகள் ஆகும். மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலாவது அட்டவணையில் மருந்துகளின் தயாரிப்பு முறை குறிப்பிடப்பட்டிருந்தால் அவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் ஆகும்.

மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலாவது அட்டவணையில் மருந்துகளின் தயாரிப்பு முறை குறிப்பிடப்படவில்லை என்றால் அவை பட்டியலிடப்படாத மருந்துகள் ஆகும். மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலாவது அட்டவணையில் வரும் மருந்துகள் அனைத்தும் அத்தியாவசியமானவை ஆகும்.

மருந்துகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, "மருந்துத் துறையின் கீழ் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஆண்டுதோறும் மொத்த விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் உச்சவரம்பு விலையை மாற்றியமைக்கிறது" 

கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு, மொத்த விலைக் குறியீடு 0.00551 சதவிகிதம் உயர்ந்தது. இச்சூழலில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கூட்டம் நடந்தது. அதில், மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலையை 0.00551 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

923 மருந்துகளின் உச்சவரம்பு விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில், 782 மருந்துகளுக்கான தற்போதைய உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விலையே வரும் 2025ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. 90 ரூபாய் முதல் 261 ரூபாய் வரை விலை கொண்ட 54 மருந்துகளின் விலை ஒரு பைசா வரை உயரப்போகிறது. 

மேலும், 2024 ஏப்ரல்  முதல் மருந்துகளின் விலை 12% வரை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று சில ஊடகச் செய்திகள்  தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வால் 500-க்கும் மேற்பட்ட மருந்துகள் பாதிக்கப்படும் என்றும் இந்தச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய செய்திகள் தவறானவை, தவறாக வழிநடத்துபவை, தீங்கிழைப்பவை.

மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (டி.பி.சி.ஓ) 2013 விதிகளின்படி, மருந்துகள் அட்டவணைப்படுத்தப்பட்டவை மற்றும் அட்டவணையிடப்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன. மொத்த விலை குறியீட்டு எண் காரணியான (+) 0.00551% அடிப்படையில், 782 மருந்துகளுக்கான தற்போதைய உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதுள்ள உச்சவரம்பு விலை 31.03.2025 வரை தொடரும். ரூ.90 முதல் ரூ.261 வரையிலான உச்சவரம்பு விலையில் 54 மருந்துகளுக்கு ரூ.0.01 (ஒரு பைசா) என்ற சிறிய அளவு விலை உயர்வு இருக்கும். அனுமதிக்கப்பட்ட விலை உயர்வு சிறியது என்பதால், நிறுவனங்கள் இந்த உயர்வைப் பெறலாம் அல்லது பெறாமல் போகலாம். எனவே, 2024-25 நிதியாண்டில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மருந்துகளின் உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

திருத்தப்பட்ட விலைகள் 2024 ஏப்ரல் 1  முதல் அமலாகும். இதன் விவரம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளத்தில் www.nppaindia.nic.in கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
Embed widget