மேலும் அறிய

NEET Topper Suicide: நீட் தேர்வு டாப்பர் - இளநிலை மருத்துவர் திடீர் தற்கொலை - காரணம் என்ன?

NEET Topper Suicide: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த இளநிலை மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEET Topper Suicide: நீட் தேர்வில் முதலிடம் பிடித்து இளநிலை மருத்துவ படிப்பை முடித்த நவ்தீப் சிங், தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர் தற்கொலை:

மத்திய டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவம் பயின்று வந்த 25 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்ச்யை ஏற்படுத்தியுள்ளது. நவ்தீப் சிங், இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவரும், கதிரியக்கவியல்-பிஜியில் பயிற்சி மருத்துவரும் ஆவார்.  இந்நிலையில், பார்சி அஞ்சுமன் விருந்தினர் மாளிகையில் உள்ள தனது அறையில் நவ்தீப் சிங் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, நவ்தீப்பின் தந்தை தனது மகன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் கவலையடைந்து அவரை நேரில் பார்த்து வருமாறு நண்பரை அனுப்பியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட நண்பர், அதை உடைத்துத் திறந்து பார்த்தபோது, ​​தூக்கில் தொங்கிய நிலையில் நவ்தீப்பின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த நபர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க, தற்போது அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறை சொல்வது என்ன?

நவ்தீப் ச்ங் அறையில் இருந்து தற்கொலை தொடர்பான குறிப்பு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் நவ்தீப் இறந்ததற்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணம் குறித்து தெளிவாக விளக்கம் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. நவ்தீப் மரணம் குறித்து தகவல் அல்லது விவரம்  அறிந்தவர்கள் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நவ்தீபின் நண்பர்கள், சக மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த நவ்தீப் சிங்:

நவ்தீப் சிங் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அவர் டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் தனது இளநிலை மருத்துவ படிப்பை முடித்துவிட்டு கதிரியக்கவியலில் தனது முதுநிலை மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருந்தார்.

யார் இந்த நவ்தீப் சிங்:

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்தீப் சிங், 12ம் வகுப்பில் 88 சதவிகித மதிப்பெண்களை பெற்று இருந்தார். இவரது தந்தை, சரைநாகா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் முதலிடம் பிடித்த போது, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கட்டமைப்பின் காரணமாக அதில் படிக்க விரும்புவதாக நவ்தீப் சிங் கூறியிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget