மேலும் அறிய

NEET Topper Suicide: நீட் தேர்வு டாப்பர் - இளநிலை மருத்துவர் திடீர் தற்கொலை - காரணம் என்ன?

NEET Topper Suicide: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த இளநிலை மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEET Topper Suicide: நீட் தேர்வில் முதலிடம் பிடித்து இளநிலை மருத்துவ படிப்பை முடித்த நவ்தீப் சிங், தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர் தற்கொலை:

மத்திய டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவம் பயின்று வந்த 25 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்ச்யை ஏற்படுத்தியுள்ளது. நவ்தீப் சிங், இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவரும், கதிரியக்கவியல்-பிஜியில் பயிற்சி மருத்துவரும் ஆவார்.  இந்நிலையில், பார்சி அஞ்சுமன் விருந்தினர் மாளிகையில் உள்ள தனது அறையில் நவ்தீப் சிங் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, நவ்தீப்பின் தந்தை தனது மகன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் கவலையடைந்து அவரை நேரில் பார்த்து வருமாறு நண்பரை அனுப்பியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட நண்பர், அதை உடைத்துத் திறந்து பார்த்தபோது, ​​தூக்கில் தொங்கிய நிலையில் நவ்தீப்பின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த நபர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க, தற்போது அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறை சொல்வது என்ன?

நவ்தீப் ச்ங் அறையில் இருந்து தற்கொலை தொடர்பான குறிப்பு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் நவ்தீப் இறந்ததற்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணம் குறித்து தெளிவாக விளக்கம் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. நவ்தீப் மரணம் குறித்து தகவல் அல்லது விவரம்  அறிந்தவர்கள் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நவ்தீபின் நண்பர்கள், சக மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த நவ்தீப் சிங்:

நவ்தீப் சிங் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அவர் டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் தனது இளநிலை மருத்துவ படிப்பை முடித்துவிட்டு கதிரியக்கவியலில் தனது முதுநிலை மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருந்தார்.

யார் இந்த நவ்தீப் சிங்:

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்தீப் சிங், 12ம் வகுப்பில் 88 சதவிகித மதிப்பெண்களை பெற்று இருந்தார். இவரது தந்தை, சரைநாகா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் முதலிடம் பிடித்த போது, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கட்டமைப்பின் காரணமாக அதில் படிக்க விரும்புவதாக நவ்தீப் சிங் கூறியிருந்தார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget