மேலும் அறிய

National Press Day | தேசிய பத்திரிகையாளர் தினம் 2021: வரலாறு, முக்கியத்துவம் என்ன? என்ன தெரியவேண்டும்?

இந்திய பத்திரிகை கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாளான நவம்பர் 16 (இன்று) தேசிய பதிரிக்க்கையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய பத்திரிக்கைக் கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாள் நவம்பர் 16. உலகெங்கிலும் பல பத்திரிகைகள் அல்லது ஊடக கவுன்சில்கள் இருந்தாலும், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடமையில் அதிகாரம் செலுத்தும் அமைப்பு ஆகும். பத்திரிகைத் துறையில் தொழில்முறை நெறிமுறைகளைப் பேணுவதற்கான சட்டரீதியான அதிகாரம் கொண்ட நோக்கத்திற்காக இந்திய பத்திரிகை கவுன்சில் 16 நவம்பர் 1966 நிறுவப்பட்டது.

1997 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 தேசிய பத்திரிக்கை தினத்தை பத்திரிக்கை கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா விடுதலை பெற்றபின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் விடிவுகாலம் பிறந்தது எனலாம். அதன்பின் உருவான இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியில் எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக அறிவித்தது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, மக்களின் பிரச்னைகளை அரசிற்கும் சமூகத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதிலும், நாட்டில் நிலவும் குற்றங்கள், மோசடிகள், ஊழல்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம்’ விளங்குகிறது. 

இந்திய பிரஸ் கவுன்சில் என்பது 1966 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டரீதியான, தீர்ப்பளிக்கும் அமைப்பாகும். இது 1978 ஆம் ஆண்டின் பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தின் கீழ் செயல்படும் பத்திரிகைகளின் சுய கட்டுப்பாட்டு கண்காணிப்புக் குழுவாகும். சபைக்கு ஒரு தலைவர் இருக்கிறார் – பாரம்பரியமாக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இந்தியாவில் செயல்படும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிற ஊடகங்களால் பரிந்துரைக்கப்பட்ட 28 கூடுதல் உறுப்பினர்கள் ஊடக உறுப்பினர்களாக உள்ளனர். 28 உறுப்பினர் குழுவில், 5 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை (மக்களவை) மற்றும் மேல் சபை (மாநிலங்களவை) உறுப்பினர்களாக உள்ளனர், மேலும் மூன்று பேர் இலக்கிய மற்றும் சட்டத் துறையை சாகித்ய அகாடமி, பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றின் வேட்பாளர்களாக பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். ஊடக சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நாளாக தேசிய பத்திரிகையாளர் தினம் வருடம்தோறும் நவம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாள், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கவுரவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தேசிய பத்திரிக்கை தினம் 2021-இல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆகியவற்றில் பகிர்வதற்கான குவோட்கள்:

"நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் சார்ந்துள்ளது, அது உள்ளவரை நம்மை மட்டுப்படுத்த முடியாது" - தாமஸ் ஜெபர்சன்

"பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு அவசியமானது மட்டுமல்ல, அதுதான் ஜனநாயகமே" - வால்டர் குரோன்கைட்

"உண்மையையும் பொய்யையும் தனது மக்கள் தீர்மானிக்க வெளிப்படையாக இருக்க பயப்படும் ஒரு தேசம் அதன் மக்களைப் பார்த்து பயப்படும் தேசம்" - ஜான் எஃப். கென்னடி

"பத்திரிக்கை சுதந்திரம் என்பது எந்த நாடும் கைவிட முடியாத ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம்" - மகாத்மா காந்தி

"பத்திரிக்கையை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கே பத்திரிகை சுதந்திரம் உத்தரவாதம்" - ஏ. ஜே. லிப்லிங்

"சுதந்திரமான பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று" - நெல்சன் மண்டேலா

"பத்திரிகை சுதந்திரமானது மட்டும் அல்ல, சக்தி வாய்ந்ததும் கூட. அந்த சக்தி நம்முடையது. மனிதன் அனுபவிக்கக்கூடிய பெருமை அது" - பெஞ்சமின் டிஸ்ரேலி

மேலும் காண

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget