மேலும் அறிய

Bomb Threats: இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை நோக்கி பறந்த விமானம் பாதி வழியில் தரையிறக்கம்

நேற்று இரவு 10.24 மணிக்கு சென்னை - மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு 10.24 மணிக்கு சென்னை - மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த 6E 5149 என்ற இண்டிகோ விமானத்தில் 196 பயணிகளும் 7 பணியாளர்களும் இருந்தனர்.

விமானம் அவசரமாக தரையிறங்கிய பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பணியாளர்களால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். பயணிகளை இறக்கிவிட்டு, விசாரணையில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் பறக்க தயாரானது. இந்த அச்சுறுத்தல்கள் தங்கள் சேவைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.” என்று தெரிவித்தார். 

41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்:

நேற்று மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சோதனை அடிப்படையில் அனைத்து மிரட்டல்கள் புரளி என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தன. 

அனைத்து விமான நிலையங்களுக்கும் பறந்த ஒரே மிரட்டல் செய்தி: 

எல்லா விமான நிலையங்களுக்கும் வந்த இ-மெயில்கள் கிட்டத்தட்ட ஒரே செய்தியைக் கொண்டிருந்தன. அந்த செய்தியில், "ஹலோ, விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெடிகுண்டுகள் வெடிக்கும். நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள்." என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

விமான நிலையங்கள், மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்: 

கடந்த ஜூன் 3ம் தேதி டெல்லி-மும்பை ஆகாசா ஏர் விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதன் பிறகு பாதுகாப்பிற்காக அந்த விமானமானது அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதேபோல், கடந்த ஜூன் 2ம் தேதி பாரிஸ்-மும்பை வழித்தடத்தில் இயங்கும் விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் முழுவதும் முழு சோதனை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த ஜூன் 1ம் தேதி சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது அந்த விமானத்தில் 172 பயணிகள் இருந்தனர். மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இமெயில்களில் வெடிகுண்டு மிரட்டல்:

இதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு நாட்களில் மும்பையில் உள்ள 60 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் அடங்கும். காவல்துறையின் கூற்றுப்படி, "இமெயில்கள் கிடைத்தவுடன், மருத்துவமனைகள் உடனடியாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் அளித்து, முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. இமெயில்கள்களில் படுக்கைகள் மற்றும் கழிப்பறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, மருத்துவமனைகளில் உடனடியாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.” என தெரிவித்தனர். 

இப்படியாக நாளுக்குநாள் விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் என வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்திய அரசிடமும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து வருகின்றன. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Embed widget