மேலும் அறிய

Bombay HC: “பொதுவெளியில் ஆண்மையற்றவன் என்றால் எந்த கணவருக்கு கோவம் வராது” - மும்பை உயர்நீதிமன்றம்

பொது வெளியில்  வைத்து ஆண்மையற்றவன் என்று கேட்ட பின்னர், குற்றவாளியால் அமைதி அடைய முடியவில்லை. இது, முத்திரை குத்துவது போன்றது. எனவே, வேண்டுமென்றே செய்யப்பட்ட திட்டமிட்ட கொலை இல்லை என்பது நிரூபனமாகிறது

பொது வெளியில் ஆண் ஒருவரை செயல் இழந்த, ஆண்மையற்ற மனிதன் என்று பெயரிட்டு அழைப்பதையும், களங்கம் சுமத்துவதையும்,  அவாமானப்படுத்துவதையும் எளிதாக கடந்து செல்ல முடியாது என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

மும்பை பந்தர்பூர் நகரில், நந்து என்று கூலித் தொழிலாளிக்கு  திருமணம் முடிந்தது. இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து நிலையம் ஒன்றில் பேருந்துக்காக காத்திருந்த சகுந்தாலா, அந்த வழியே வந்த நந்துவை சந்தித்திருக்கிறார். தன்னையும், தனது குழந்தைகளையும் காக்கமுடியாத சூழலை நினைத்தும், சில முந்தைய அவமானங்களை மனதில் வைத்துக் கொண்டும் நந்துவை  சரளமாக வசைப்பாட ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக, நீ ஒரு செல்லாக் காசு. செயல் இழந்தவன்... ஆண்மையற்றவன்.... உன்னை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றொருவருடன் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளேன்" என்று கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளார். மேலும், நந்துவின் சட்டையைப் பிடித்து நேரடி மோதலிலும் ஈடுபட்டிருக்கிறார். 


Bombay HC: “பொதுவெளியில் ஆண்மையற்றவன் என்றால் எந்த கணவருக்கு கோவம் வராது” -  மும்பை உயர்நீதிமன்றம்

மிகவும் ஆள்நடமாட்டம் உள்ள சாலையில்,பலர் கூடியிருக்கும் பேருந்து நிலையத்தின் முன்பு தனக்கு நேர்ந்த களங்கத்தை நினைத்து நந்து அமைதியை இழந்திருக்கிறார். அப்போது, ஏற்பட்ட மன அதிர்ச்சி அவரை நிலைகுழைய செய்துள்ளது. ஆத்திரமடந்த அவர், பேருந்து நிலையத்தில் வைத்தே சகுந்தலாவை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் மிகவும் படுகாயமடைந்த சகுந்தலா உயிரிழந்தார். இதனையடுத்து, நந்துவை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில்  நின்றுக் கொண்டிருந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஆனைவரும் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். 

இந்நிலையில், நீதிபதிகள் சாதனா ஜாதவ் மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பெறப்பட்ட  சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், "குற்றவாளிக்கு திருமணாகிவிட்டது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. அந்த துரதிர்ஷ்டவசமான தினத்தன்று, மறைந்த சகுந்தலா பொது வெளியில் நின்றுக் கொண்டு திட்டவும், அவமதிக்கவும் தொடங்கியுள்ளார். இது, மிகவும் சித்ரவதையான செயல். கிண்டலுக்கு உள்ளான குற்றவாளி உணர்வு ரீதியான மன அதிர்ச்சியையும் எதிர் கொண்டிருக்கிறார் என்பது சாட்சியங்களின் மூலம் தெரிய முடிகிறது. 

பொது வெளியில்  வைத்து ஆண்மையற்றவன் என்று கேட்ட பின்னர், குற்றவாளியால் அமைதி அடைய முடியவில்லை. இது, முத்திரை குத்துவது போன்றது. எனவே, வேண்டுமென்றே செய்யப்பட்ட திட்டமிட்ட கொலை இல்லை என்பது நிரூபனமாகிறது. அவர் மரணம் விளைவிக்கவேண்டும் என்ற  நோக்கத்துடன் (intention ) தாக்கவில்லை. ஏற்கனவே, 12 ஆண்டுகள் சிறையில் தண்டனை பெற்ற காரணத்தினால் அவரை, இந்த நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிடுகிறது” என்று தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..!  பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.