மேலும் அறிய

MP Kanimozhi: நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை பேசிய எம்.பி ரமேஷ் பிதூரி.. விசாரணை குழு அமைக்க எம்.பி கனிமொழி வலியுறுத்தல்..

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தகாத வார்த்தைகளை பேசிய எம்.பி ரமேஷ் பிதூரிக்கு எதிராக விசாரணை குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகருக்கு எம்.பி கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ரமேஷ் பிதூரி நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை சக எம்.பியை நோக்கி பயன்படுத்தியதற்கு எதிராக விசாரணை குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. செபடம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் முக்கியமாக மகளிருக்காக இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நேற்று கடைசி நாள் கூட்டத்தொடரில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் மக்களவையில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் பாஜக எம்.பியின் செயலால் அரங்கமே அதிர்ந்து போனது.  

பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டானிஸ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதூரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். பயங்கரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதி என குறிப்பிட்டு பேசினார். ரமேஷ் பிதூரி அருகில் அமர்ந்து, இதை கேட்டு கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சிரித்தார். இது, எதிர்க்கட்சி எம்பிக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த பாஜக எம்பிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரமேஷ் பிதூரிக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், "இத்தகைய நடத்தை தொடர்ந்தால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாஜக எம்பியின் செயலுக்கு நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "உறுப்பினர் கூறிய கருத்துக்களால் எதிர்க்கட்சியினர் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். ஆனால், அமைச்சரின் வருத்தம் போதாது என்றும் பாஜக எம்பியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ரமேஷ் பிதூரிக்கு எதிராக விசாரணை குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில், “ சந்திராயன் 3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, ​​சக நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலிக்கு எதிராக வெறுக்கத்தக்க மற்றும் அவதூறான மொழியில் பேசியதற்காக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரிக்கு எதிராக சிறப்பி மசோதா கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அவரது உரையின் போது, ​​ ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலிக்கு எதிராக, மக்களவையின் பதிவின் ஒரு பகுதியாக இருக்கும் மிக மோசமான, முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அலிக்கு எதிராக அவர் சொன்ன வார்த்தைகளில் பயங்கரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதி என குறிப்பிட்டு பேசியுள்ளார். எனவே, விதி 227, 222 மற்றும் 226 -ன் கீழ் இந்த அறிவிப்பை வழங்க உள்ளேன்.

விதி எண் 227 என்பது இது போன்ற ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால் சபாநயகர் சிறப்பு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கலாம்.

லோக்சபாவில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 227 இன் கீழ் இந்த விஷயத்தை சிறப்புரிமைக் குழு மூலம் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எம்.பி. ரமேஷ் பிதூரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குலைத்ததற்கு முதன்மையான ஆதாரம் இருப்பதால், சிறப்புரிமைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget