மேலும் அறிய

MHA Order Mock Drills: வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...

வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகையை நடத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே  பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல்

கடந்த மாதம் பஹல்காம் 22-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெஸிஸ்டண்ட் ஃபிரன்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இந்தியா பல்வேறு வகைகளில் பாகிஸ்தானுக்கு பதிலடி வழங்குவதை தொடங்கியது. முதற்கட்டமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பலவிதமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

இதையடுத்து, பாகிஸ்தானும், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது, இந்தியர்களை திருப்பி அனுப்புவது என பலவிதமான நடவடிக்கைகளை எடுத்தது. இதனிடையே, ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், வேறு வழியில்லாமல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், இங்கு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. எந்த நேரமும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டு அரசுக்கு, அவர்களது உளவுத்துறை எச்சரிக்கையும் விடுத்தது.

இப்படிப்பட்ட சூழலில், போர் பதற்ற ஒத்திகை நடத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு என்ன.?

உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், போர் பதற்ற சூழலில் அவசர கால வெளியேற்ற ஒத்திகைகள், மாணவர்கள், பொதுமக்களுக்கு, போர்க்கள சூழலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான தாக்குதல் நடைபெறும்போது ஒலிக்கப்படும் அபாய ஒலி சைரன்களை ஒலிக்க விட்டு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல், எதிரிகளின் தாக்குதல் நடைபெறும் நேரத்தில், மின்வெட்டு அறிவிக்கப்பட்டால் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளவும், முக்கிய மின்னுற்பத்தி கேந்திரங்களை பாதுகாக்கும் ஒத்திவை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால், இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுவதாக கருதப்படுகிறது. இதனால், 7-ம் தேதிக்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

7-ம் தேதிக்குப்பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
Siddaramaiah:
Siddaramaiah: "எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை..தலைமை சொன்னதால் ராஜினாமா" கண்ணீருடன் விடைபெற்ற சித்தராமையா
Karnataka CM Resignation: கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
கர்நாடகாவில் முதல்வர் சஸ்பென்ஸ் முடிந்தது; பதவி விலகும் சித்தராமையா, பதவி ஏற்கும் DK சிவகுமார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget