மேலும் அறிய

Parliment Special Session: முடிந்தது சகாப்தம்.. தொடங்கியது புதிய அத்யாயம்.. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டத்தொடர்..

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று கூட்டுக் கூட்டம் முடிந்தபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூட்டுக் கூட்டம் நடைபெற்று முடிந்த பின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றனர். 

பெரும் பொருட்செலவில் டெல்லியில் மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. அதன் திறப்பு விழாவில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக செங்கோல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், வழக்கத்திற்கு மாறாக 5 நாட்கள் நடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதில், முதல் நாள் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும், அதற்கடுத்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுவதும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, பேசிய பிரதமர் மோடி உள்ளிட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றம் தொடர்பான தங்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நாளின் முடிவில் பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு உறுப்பினர்கள் பிரியா விடை அளித்தனர். தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பிரமாண்ட கட்டடம் அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்வதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில்  குழுவாக இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுமார் 750 எம்.பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத் தொடரில், ” விநாயகர் சதுர்த்தி நாளான இன்று புதிய  பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும். பழைய நாடாளுமன்றத்தில் தான் இந்தியா அரசியலமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தான் இந்தியக் கொடியும் தேசிய கீதமும் உருவானது. இரு அவைகளின் உறுப்பினர்களும் பல வரலாற்று முடிவுகளை எடுத்த இடம் இது.  ஷாஹா பானோவின் முத்தலாக் வழக்கு, திருநங்கைகள் மசோதா மற்றும் 370வது பிரிவு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கட்டிடம் மற்றும் அதுவும் இந்த மைய மண்டபம் நம் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. 1952 முதல், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகளின் தலைவர்கள் இந்த மத்திய மண்டபத்தில் நமது  நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியுள்ளனர். நமது குடியரசுத் தலைவர்கள் சுமார் 86 முறை இங்கு உரையாற்றியுள்ளனர்” என கூறினார்.

மேலும், “பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370வது சட்டப்பிரிவு இந்த நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம். இந்தியாவின் இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள், அது உலகளவில் பாராட்டப்படுகிறது.  கடந்த 1000 ஆண்டுகளில் இந்தியா இன்று இருப்பது போல் சிறப்பாக இல்லை. இந்தியாவின் வங்கித் துறை தானே செழித்து வருகிறது” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றனர். வந்தே மாதரம் என முழங்கியபடி அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பிக்களும் உள்ளே சென்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்!  அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
"அப்பா எல்லாம் வீண் விளம்பரம்" கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..!  பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.