மேலும் அறிய

Stan Swamy | இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டல்களைத் தாண்டி ஸ்டேன் சுவாமியின் பெயரைச் சூட்டும் கல்லூரி நிர்வாகம்!

இந்துத்துவ அமைப்புகள் மிரட்டினாலும் தங்களது கல்லூரியின் பூங்காவிற்கு பழங்குடியின உரிமைப் போராளி ஸ்டான் சுவாமியின் பெயரை சூட்டுவோம் என மங்களூரில் உள்ள கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

84 வயதான மனித உரிமை ஆர்வலட் ஸ்டேன் சுவாமி. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங் குடியினரின் சுயநிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காக போராடியவர். பீமா கொரேகான் வழக்கில் தேசியப் புலனாய்வு அமைப்பின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கைநடுக்கம் காரணமாக, உறிஞ்சிக் குடிப்பதற்குச் சிறையில் தனக்கு உறிஞ்சுகுழல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கும் ஆளான ஸ்டேன் சுவாமி கடந்த ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில் ஒரு கல்லூரி நிர்வாகம் அவரது பெயரை தங்களது கல்லூரியின் பூங்காவிற்கு வைக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள புனித அலாய்சியஸ் கல்லூரியின் கொடேகர் பீரி வளாகத்தில் அமைந்துள்ளது ஒரு பூங்கா. இந்த பூங்காவிற்கு பெயர் சூட்டும் விழாவை கடந்த வியாழக்கிழமை நடத்த முடிவு செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் கர்நாடக மாநில வருகையையொட்டி இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய கல்லூரியின் முதல்வர் பாதிரியார் மெல்வின் பிண்டோ, குடியரசுத் தலைவரின் வருகையையொட்டிய வேலைகளில் தாங்கள் மும்முரமாக இருப்பதாகவும், பூங்காவில் பெயரிடும் விழா காரணமாக எந்த பிரச்னையும் வேண்டாம் என்று போலீசார் கூறியதாக தெரிவித்தார். 


Stan Swamy | இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டல்களைத் தாண்டி ஸ்டேன் சுவாமியின் பெயரைச் சூட்டும் கல்லூரி நிர்வாகம்!

கல்லூரியின் பூங்காவிற்கு ஸ்டேன் சுவாமியின் பெயரை சூட்டும் கல்லூரி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கல்லூரி நிர்வாகம் விழாவை முன்னெடுத்துச் சென்றால், தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்லூரி வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கல்லூரி நிர்வாகம்தான் பொறுப்பு என தெரிவித்தார் வி.எச்.பி. தலைவர் சரண் பம்ப்வெல். இது தொடர்பாக போலிசில் புகாரும் ஏபிவிபி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிறுவனம் தேசபக்தியை ஊக்குவிக்கவிப்பதற்கு பதிலாக தேச துரோகத்தை  மகிமைப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். 

இதற்கிடையே, கல்லூரி நிர்வாகத்தை அச்சுறுத்திய இந்துத்துவா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல அமைப்புகளும் ஆர்வலர்களும் தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்துத்துவா குழுக்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தலையிட உரிமை இல்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் சிறுபான்மையினரை கொலை செய்வதிலும், கலவரங்களை நடத்துவதிலும், சிறுபான்மையினரை இரண்டாம் தர குடியுரிமைக்கு தள்ளுவதற்காக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர். 


ஸ்டேன் சுவாமி தனக்கு எதிராக புனையப்பட்ட வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும், அவர் சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்த கடிதத்தில், விளிம்புநிலையில் உள்ள  சமூகங்களுடன் நிற்கும் ஒரு மனித உரிமை ஆர்வலருக்கு எதிரான அமைப்பு ரீதியான ஒடுக்குமுறையின் அடையாளமாக மாறியுள்ளது சுவாமியின் மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget