மேலும் அறிய

மக்களவை  தேர்தலுக்கு தயாரான முக்கிய தலைவர்கள்.. மூன்றாவது அணிக்கு அச்சாரம் போட்ட மம்தா பானர்ஜி.. பரபரக்கும் அரசியல் களம்..!

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு பெரும் பின்னடவு ஏற்படும் வகையில் ஒரு அரசியல் நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

மம்தா திட்டம்:

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. மேற்குவங்கத்தின் முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா, கடந்த சில மாதங்கள் முன்பு வரை பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார்.

ஆனால், அவருடைய கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரின் செய்லபாட்டில் மாற்றம் தெரிய தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக, பாஜகவை போன்றே காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்க தொடங்கினார். இந்நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த சந்திப்பு கொல்கத்தாவில் நடந்தது.

இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை மம்தா அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு:

எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயன்று வரும் சூழலில், இந்த மூன்று தலைவர்களின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி விவகாரத்தை முன்வைத்து தங்களை டார்கெட் செய்ய பாஜக முயல்வதாக எதிர்கட்சிகள் நினைக்கின்றன.

இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில், "ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தை செயல்பட விடமாட்டார்கள். காங்கிரஸைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் செயல்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதே இதன் பொருள்.

பா.ஜ.க.வுக்கு உதவும் வகையில் ராகுல் காந்தி (எதிர்க்கட்சியின்) முகமாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்கை மார்ச் 23ஆம் தேதி சந்திக்கிறார். பாஜகவை எதிர்ப்பது போல காங்கிரஸை எதிர்க்க மற்ற எதிர்க்கட்சிகளுடன் விவாதிப்போம். மூன்றாவது அணி என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், பாஜகவை எதிர்கொள்ளும் வலிமை பிராந்திய கட்சிகளுக்கு உள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
Embed widget