மேலும் அறிய

அடுத்தடுத்து உயிரிழக்கும் புலிகள்.. கர்நாடகாவில் அதிர்ச்சி! ஆர்டர் போட்ட சித்தராமையை..விசாரணை தீவிரம்

காதேஷ்வர் கோயிலுக்கு அருகிலுள்ள மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ளன.

மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகம்:

ஹனூர் தாலுகாவின் மீனியம் வன மண்டலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாதேஷ்வர் கோயிலுக்கு அருகிலுள்ள மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ளன. இந்த இறப்புகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார், புலிகள் பாதுகாப்பில் நீண்ட காலமாக முக்கிய இடமாக இருக்கும் ஒரு மாநிலத்திற்கு இது ஒரு "மனதை உடைக்கும் அடி" என்று விவரித்தார். 563 புலிகளைக் கொண்ட கர்நாடகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் முதலில் தொடங்கப்பட்ட புலிகள் திட்டத்தின் கீழ், நாட்டில் புலிகள் எண்ணிக்கையில்  இரண்டாவது இடத்தில் உள்ளது.

விஷம் வைத்து கொலை?

புலிகள் விஷம் வைத்து கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்த புலிகளுக்கு அருகில் ஒரு பசுவின் சடலத்தையும் வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், மரணத்தின் தன்மை குறித்த விவரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்குப் பிறகுதான் தெரியவரும். 

விசாரணையை முடுக்கிவிட்ட அமைச்சர்:

கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே, "ஒரு தாய் புலி மற்றும் நான்கு குட்டிகள் உட்பட ஐந்து புலிகள்  மகாதேஸ்வர மலைகளில் இறந்துள்ளன. உயர்மட்ட விசாரணைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்தால் நாங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படி பிரேத பரிசோதனை நடத்தப்படும்" என்று ANI இடம் கூறினார்.

கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர்களுக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வ உத்தரவுகளை பிறப்பித்து, மாநில அரசு இந்த விஷயத்தை மிகுந்த தீவிரமாகக் கருதுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளார். புலிகள் இறப்புக்கு யார் காரணம் எனக் கண்டறியப்பட்டு அவர்கள்  மீது கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்

இதற்கிடையில், புலியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்தார். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
Gaza Peace Plan: ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
Gaza Peace Plan: ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
பனங்கற்கண்டு, வெல்லம் நல்லதா? பேலியோவில் இனிப்புக்கு ஏன் தடை? மருத்துவர் விளக்கம்!
பனங்கற்கண்டு, வெல்லம் நல்லதா? பேலியோவில் இனிப்புக்கு ஏன் தடை? மருத்துவர் விளக்கம்!
TVK Vijay : ‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
சென்னையில் வேலை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்ன தகுதி? எவ்வளவு சம்பளம்?
சென்னையில் வேலை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்ன தகுதி? எவ்வளவு சம்பளம்?
MK STALIN: கோவையை மொத்தமாக தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு
கோவையில் ஒரு தொகுதியையும் விட்டு விட கூடாது...மொத்தமா தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் உத்தரவு
Embed widget