மேலும் அறிய

Accreditation Education institutes: உயர் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம்: வருகிறது புதிய மாற்றம்! நோக்கம் என்ன?

Accreditation Higher Education institutes: இந்திய உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதில் இனி புதிய நடைமுறை பின்பற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

Accreditation Higher Education institutes: இந்திய உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதில் இனி கிரேட் முறை பின்பற்றப்படாது என கூறப்படுகிறது.

இனி கிரேட் முறை இல்லை:

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) இனி அங்கீகாரச் செயல்பாட்டின் போது கிரேடுகளைப் பெறாது என கூறப்படுகிறது. மாறாக, அவை "அங்கீகாரம் பெற்றவை அல்லது அங்கீகாரம் பெறாதவை" என்று மட்டுமே இனி வகைப்படுத்தப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு  அங்கீகாரம் வழங்கும் நிர்வாகமானது "முதிர்வு அடிப்படையிலான தர அங்கீகாரத்தை (நிலை 1 முதல் 5 வரை) பயன்படுத்த உள்ளது. இது “பலதுறை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான உலகளாவிய சிறந்த நிறுவனம்” என்ற மிக உயர்ந்த நிலையை (5ம் நிலை) அடைய கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை:

தேசிய கல்விக் கொள்கை 2020 ஆனது,  2035 ஆம் ஆண்டிற்குள் உயர்கல்வி நிலையங்களில் மொத்த சேர்க்கையை 50 சதவிகிதத்தை இலக்காக கொண்டுள்ளது. இதையொட்டி,  மத்திய கல்வி அமைச்சகம் (MoE) இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், IIT கவுன்சிலின் நிலைக்குழுவின் தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நவம்பர் 2022 இல் அமைத்தது. உயர்கல்வி நிறுவனங்களுக்கான மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்கு சீர்திருத்தங்களை முன்மொழிய இக்குழு அமைக்கப்பட்டது. பல கட்ட ஆய்வு பணிகளுக்குப் பிறகு இந்த குழு, கடந்த 16ம் தேதி தங்களது அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் சமர்பிக்கப்பட்டது.

உயர்கல்வியில் வரும் சீர்திருத்தங்கள் என்ன?

இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கான காலமுறை ஒப்புதல், மதிப்பீடு, அங்கீகாரம் மற்றும் தரவரிசையை வலுப்படுத்தும் வகையில் மாற்றத்தக்க சில சீர்திருத்தங்களை ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.  உயர்கல்வி நிலையங்களின் பங்கேற்பு மற்றும் அங்கீகார நிலைகளை உயர்த்துவதற்கான திட்டங்களை வழிகாட்டுவதோடு, ஊக்குவிப்பதிலும் இந்த பரிந்துரைகள் கவனம் செலுத்துகின்றன. புதிய செயல்முறையின் சிறப்பம்சம், உலகளவில் பலர் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப "பைனரி அங்கீகாரத்தை" செயல்படுத்துவதாகும்.  இதன் மூலம், தற்போது நடைமுறையில் இருக்கும் கிரேட் முறை இனி பின்பற்றப்படாது. உயர்கல்வி நிறுவனங்கள் "அங்கீகாரம் பெற்றவை அல்லது அங்கீகாரம் பெறாதவை" என்று  மட்டுமே வகைப்படுத்தப்பட உள்ளன.

புதிய ”அங்கீகரிக்கும்” நடைமுறை என்ன?

உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரமானது இனி, 1 முதல் 5 வரையிலான நிலைகளின் அடிப்படையில் வழங்கப்படும். இது உயர் கல்வி நிறுவனங்கள் தங்களை பரந்து, விரிந்து மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.  1 முதல் 4 வரையிலான நிலைகள் உயர்கல்வி நிறுவனங்களை தேசிய அளவில் சிறந்ததாக பட்டியலிட, 5ம் நிலை என்பது சர்வதேச தரத்திலான உயர்கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்த வழங்குகிறது” என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறையின் நோக்கம் என்ன?

ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி, பைனரி மற்றும் முதிர்வு அடிப்படையிலான தரப்படுத்தப்பட்ட அங்கீகாரத்திற்கான அளவீடுகள் உயர்கல்வி நிறுவனங்களின் வெவ்வேறு பண்புக்கூறுகள், விளைவுகள் மற்றும் தாக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. புதிய செயல்முறையானது நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நோக்கம் மற்றும் பாரம்பரியம்/மரபு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துகின்றன.  வழிகாட்டுதல் மற்றும் கையாளுதல் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர இருப்பிட நிறுவனங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget