மேலும் அறிய

பழங்குடியினருக்கு ட்ரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி ! வாழ்த்திய முதலமைச்சர்..

தொலைதூர பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அவசரகால மருந்துகளை எடுத்துச்செல்வதற்காக உருவாக்கப்பட்ட டிரோனின் சோதனை முயற்சி நடைபெற்றது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிரான போர் மிகத்தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்தியாவும் தனது பங்கிற்கு தொழில்நுட்ப உதவிகள் மூலம் மக்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டிரோன்ஸ் என அழைக்கப்படும் ஆளில்லாத சிறிய வகை பறக்கும் விமானங்கள் மூலம் கொரோனா தடுப்பூசியை டெலிவரி செய்வதற்கான சோதனையை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆந்திர பகுதியில் மலைவாழ் கிராமத்திற்கு அடிப்படை மருந்து பொருட்களை ஏற்றிச்சென்று வெற்றிக்கண்டது . இந்நிலையில் இதே போல மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைத்தூர பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அவசரகால மருந்துகளை எடுத்துச்செல்வதற்காக உருவாக்கப்பட்ட டிரோனின் சோதனை முயற்சி நடைபெற்றது.

மகாராஸ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள ஏராளமான கிராமங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான ஜவ்ஹர் பகுதிக்கு இந்த டிரோன் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச்சென்றுள்ளது. முதற்கட்டமாக 300 கொரோனா தடுப்பூசிகள் டிரோன் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 10 நிமிடங்களில் அடைந்து சோதனை முயற்சி வெற்றையடைந்துள்ளது. டிரோன் புறப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடைவதற்கு சாலை மார்க்கமாக 40 நிமிடங்கள் ஆகும். ஆனால் டிரோம் 10 நிமிடங்களில் மருத்துவமனையை சென்றடைந்திருப்பதால் அவசர காலங்களில் மருத்துவ உதவிகளில் டிரோன் முக்கிய பங்காற்றும் என்பது உறுதியாகியுள்ளது.

பால்கர் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகளை வெற்றிகரமாகக் கிடைக்கச் செய்ததற்காக பால்கர் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை மற்றும் ஊழியர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பால்கர் மாவட்டம் ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வது மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான முன்னோடி  என்றும் முதல்வர் பாராட்டியுள்ளார். எதிர்காலத்தில், இரத்தம் மற்றும் உறுப்புகளை வழங்குவதற்கும் இதனை பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர்  டாக்டர் மாணிக் குர்சல் கூறும் பொழுது, "தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பைலட் திட்டம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் (டிஜிசிஏ) சமர்ப்பிக்கப்பட்டது, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தனர், அதன் மூலம் செய்த சோதனையில் தற்போது நாங்கள் வெற்றி கண்டுள்ளோம் என தெரிவித்தார்.

இதே போல அம்மாவட்ட மருத்துவ அதிகாரியான மருத்துவர் தயானந்த் சூர்யவான்ஷி பேசிய போது, ‘இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாத ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் தவறான எண்ணத்தையும் மாற்ற முடியும்’ என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget