மேலும் அறிய

Maharashtra landslide: நிலச்சரிவில் சிக்கி விலங்குகள் அழுகியதால் துர்நாற்றம்.. 78 பேர் காணாமல் போனதால் தொடரும் அச்சம்!

நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கிய விலங்குகள் உயிரிழந்துள்ளதால் அதன் துர்நாற்றம் கிராமத்தில் வீசுவதாகவும், அதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலியான நிலையில், காணாமல் போன 78 பேரை தேடும் பணி ஞாயிற்று கிழமையை ஒட்டி ஒத்தி வைக்கப்பட்டது. 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்தது. கடந்த புதன் கிழமை ராய்காட் மற்றும் பார்கர்ம மாவட்டங்களில் அதிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மும்பையில் இருந்து 80கி.மீ. தூரத்தில் இருக்கும் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 17 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவிலும், இடிபாடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போன 78 பேரை கண்டறியும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள் இடிந்து விழுந்த பகுதிகளில் தோண்ட தோண்ட சடலங்கள் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால், மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு பகுதியில் அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு மக்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் துர்திஷ்டவசமாக ஒரு தீயணைப்பு துறை வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததாலும், மழைபெய்து வருவதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. 

நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கிய விலங்குகள் உயிரிழந்துள்ளதால் அதன் துர்நாற்றம் கிராமத்தில் வீசுவதாகவும், அதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Embed widget