மேலும் அறிய

புதுச்சேரி வரலாற்றில் 3 ஆவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

’’புதுச்சேரி வரலாற்றி இதுவரை 1968ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் என இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது’’

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலானது நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். வென்ற வேட்பாளர் சான்றிதழ் பெறும் போது கைகுலுக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

புதுச்சேரி வரலாற்றில் 3 ஆவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுச்சேரி வரலாற்றில் சுதந்திரத்துக்கு பின் 2 முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. அதாவது கடந்த 1968 ஆம் ஆண்டு முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி 38 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பின் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வருகிற அக்டோபர் மாதத்துக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு வாரியாக வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பிரச்சாரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்ட உத்தரவு விவரம்:

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். ஒரு கொரோனா  தொற்று பாதித்தவர் வேட்பாளராக விரும்பினால், அவர் முன்மொழிபவர் மூலம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்களின் முன்னிலையில் தொகுதி வாரியாக மனுக்கள் பரீசிலனை நடைபெறும். அப்போது வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் இருக்க வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், விதிகளில் குறிப்பிட்டு உள்ளப்படி சின்னங்கள் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர் ஒரே சின்னத்தை தேர்வு செய்திருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

புதுச்சேரி வரலாற்றில் 3 ஆவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வேட்பாளர் அதிகபட்சமாக 5 பேருடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம். பிரசாரத்தின் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பெரிய குழுக்களாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது. கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேட்பாளர்கள் தொகுதியில் கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அதிகளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் இருப்போர் சுகாதாரத்துறை மூலம் வெப்ப அளவு பரிசோதித்தே அனுமதிக்கப்படுவர்.

வெல்லும் வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் தரும் போது கைக்குலுக்க அனுமதி கிடையாது. வென்றோர் ஊர்வலம் செல்லவும், ஆதரவாளர்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget