மேலும் அறிய

லக்கிம்பூர் சம்பவம் கண்டனத்துக்குரியதே; ஆனால்.. நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார்?

லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியதே ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கின்றன.

லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியதே ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கின்றன. அவற்றிற்கும் இதேபோல் குரல் கொடுக்க வேண்டும். அந்த சம்பவம் பாஜக ஆளும் உ.பி.யில் நடக்கவில்லை என்பதால் அமைதி காப்பதேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். ஹார்வர்டு கென்னடி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த கலவரம் குறித்தும், அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவரிடம், இந்தியாவையே உலுக்கிய லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோ அமைச்சர்களோ இதுவரை ஒருவார்த்தைகூட சொல்லாதது ஏன் என்றும், அவ்வாறு கேள்வி எழுப்பப்படும் போது ஏன் தற்காப்பு நிலைக்கு அரசு செல்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நிச்சயமாக இல்லை. நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி. லக்கிம்பூரில் நடந்தது நிச்சயமாக கண்டனத்துக்கு உரிய சம்பவம் தான். ஆனால், இதேபோன்ற சம்பவங்கள் வேறு இடங்களிலும் நடக்கின்றன. அவற்றைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. அது பாஜக ஆளும் உ.பி.யில் நடக்கவில்லை என்பதால் யாரும் பேசுவதில்லையா? 

மேலும், நானோ எங்களின் பிரதமரோ இவ்விஷயத்தில் தற்காத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் இந்தியாவின் சார்பில் தான் பேசுகிறோம். நான் இந்தியாவுக்காக பேசுவேன். ஏழைகளின் நீதிக்காகப் பேசுவேன். அதைவிதித்து ஏதேனும் கேலி கூத்தான விஷயங்களைப் பற்றி பேசுவதாயின், நான் அதிலிருந்து விலகி உண்மையைப் பற்றி பேசுவோமோ என்று கேட்பேன்" என்றார்.


லக்கிம்பூர் சம்பவம் கண்டனத்துக்குரியதே; ஆனால்.. நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார்?

"லக்கிம்பூர் சம்பவத்தில் உண்மை கண்டறியப்படும், நீதி நிலைநாட்டப்படும். அது அமைச்சர் மகனாகவே இருந்தலௌம் சரி. நீதி நிலைநாட்டப்படும். அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் எல்லா வன்முறை சம்பவங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும். லக்கிம்பூர் சம்பவம் போன்று பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் சம்பவம் பற்றி மட்டும் பேசக்கூடாது" என்றும் அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று, லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் மற்றும் மாநில துணை முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் மீது வாகனம் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பிரதமர் ஏதும் கருத்து தெரிவிக்காத நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget