மேலும் அறிய

பெண் கைதிகள் சிறையில் கர்வா சௌத் விரதம்... கணவர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்களும் கலந்துகொண்ட சுவாரஸ்யம்!

சுவாரஸ்யமான விஷயமாக கணவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண் கைதிகளும் இந்த நோன்பைக் கடைபிடித்துள்ளனர்.

லக்னோ சிறையில் உள்ள சுமார் 50 பெண் கைதிகள் ‘கர்வா சௌத்’ தினத்தை முன்னிட்டு இன்று விரதம் மேற்கொண்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்வா சௌத் விரதம்

தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியத்துக்காக ஆண்டுதோறூம் வட இந்தியாவில் பெண்கள் கடைபிடிக்கும் விரதம் கர்வா சௌத். பாகிஸ்தானிலும் இந்த விரதத்தை அதிகம் கடைபிடிக்கின்றனர்.

இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாகும் முன்பிருந்து மாலை சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். சந்திரன் முன்பு தங்கள் விரதத்தைக் கலைத்து உணவு உட்கொள்கின்றனர். இன்றும் நாளையும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சூழலில் திருமணமான பெண் கைதிகள் கர்வா சௌத் விரதம் அனுசரிக்கவும் இப்பண்டிகையுடன் தொடர்புடைய அனைத்து சடங்குகளையும் செய்யவும் முன்னதாக உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

50 கைதிகள் விரதம்

இதனையடுத்து, லக்னோ சிறையில் சுமார் 50 பெண் கைதிகள் கர்வா சவுத் விரதம் இருந்து சடங்குகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சிறை நிர்வாகத்தின் கூற்றுப்படி, திருமணமான பெண் கைதிகளில், 10 கைதிகள் சிறையில் தங்கள் முதல் கர்வா சவுத்தை கொண்டாடுகிறார்கள்.

பெண் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு பூஜை பொருள்கள் மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பவும் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பின் கீழ் விரதம்

மூத்த சிறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி கூறுகையில், “இந்தப் பெண்கள் அனைத்து சடங்குகளையும் எங்கள் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சுமார் அரை டஜன் பெண் கைதிகளின் கணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புனித நாளில் அவர்கள் தங்கள் மனைவிகளை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பெண் கைதிகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.

திருமணமான பெண்கள், சந்திரனைப் பார்த்த பிறகு நடத்தப்படும் பூஜைக்காக தங்கள் சிறைக்கு வெளியே ஒரு வட்டத்தில் உட்கார அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரைக் கொலை செய்த பெண்கள் விரதம்

இதனிடையே கோரக்பூரில், மாவட்ட சிறையில் உள்ள சுமார் 12 பெண் கைதிகள் இன்று கர்வா சௌத் விரதத்தை கடைபிடித்தனர். 

சுவாரஸ்யமாக, கணவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண் கைதிகளும் இந்த விரதத்தைக் கடைபிடித்துள்ளனர்.

காதலனின் துணையுடன் தனது சகோதரனைக் கொன்ற குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லீம் பெண் ஒருவரும் விரதம் இருந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

முன்னதாக பாலிவுட் நடிகைகள் ரவீனா டாண்டன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிகர் அனில் கபூர் வீட்டுக்கு வந்து கர்வா சௌத் விரத விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிக லைக்குகளைப் பெற்று வருகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget