மேலும் அறிய

”இந்து மதக் கூட்டங்களால் மாசு அதிகரிக்காதா?” - மனுதாரரை கடுமையாகச் சாடிய கர்நாடக உயர்நீதிமன்றம்..

”பொது இடங்களில் வாரம்தோறும் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களால் மாசு அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் மனுதாரர்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் சட்டவிரோதமாக  இயேசு சிலுவை கட்டப்படும் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுதாக்கல் செய்த மனுதாரரை அந்த மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை குறிவைப்பது ஏற்புடையதல்ல என்றும் கண்டனம் தெரிவித்தனர்.                

யோகா ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மனுதாரர் தனது மனுவில், "பொது இடத்தில் எழுப்படும் இயேசு சிலுவைகளை அகற்ற வேண்டும். பொது இடங்களில் வாரம்தோறும் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களால் மாசு அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக தடுக்கவேண்டும். மேலும், இத்தகைய செயல் சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாக  அமைகிறது" என்று குறிப்பிட்டார். தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா மற்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த மனு ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை மீது நடத்தப்படும் திட்டமிட்ட  தாக்குதல். இதைத்தவிர வேறு உந்துதல் மனுதாரரிடம் இல்லை” என்றும் தெரிவித்தனர். 

மனுதாரரின் ஒவ்வொரு வாதத்துக்கும் நீதிபதிகள் தக்க எதிர்வாதங்களை எழுப்பினர். மாசு தொடர்பாக பதிலளித்த நீதிபதிகள், "பிரார்த்தனை கூட்டங்களால் மாசு அதிகரிக்குமா? அப்படியென்றால், இந்து மத கூட்டங்களில் மாசு அதிகரிக்காதா? நீங்கள், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை தாக்கவில்லையா?” என்று கூறினார். 

”இந்து மதக் கூட்டங்களால் மாசு அதிகரிக்காதா?” - மனுதாரரை கடுமையாகச் சாடிய கர்நாடக உயர்நீதிமன்றம்..

மேலும், நில அபகரிப்பு தொடர்பான வாதத்துக்குப் பதிலளித்த நீதிபதிகள்”, பலதரப்பட்ட மத அமைப்புகளும் சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகள் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி பல வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரண்டு சிலுவை நிறுவப்படுவதால் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமா?" என்று தெரிவித்தனர். 

தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா தனது உத்தரவில், "மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.  அவரின் வாதங்களை சற்று கவனியுங்கள். அவரின் நோக்கம் வெளிப்டையாகவே உள்ளது. எத்தகைய பாரபட்ச கருத்துக்கள் அவரிடம் உள்ளன? இது திட்டமிடப்பட்ட வழக்கு. இந்த மனுவை ரத்து செய்கிறோம்" என்று காட்டமாக தெரிவித்தார். 

”இந்து மதக் கூட்டங்களால் மாசு அதிகரிக்காதா?” - மனுதாரரை கடுமையாகச் சாடிய கர்நாடக உயர்நீதிமன்றம்..

 

சட்ட விரோத கட்டமைப்புகள் இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். கர்நாடகா மாநிலத்தில் மத வழிபாடு தொடர்பான சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்புடைய மற்றொரு பொது நல வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
Embed widget