மேலும் அறிய

Bangalore 144 Act: பெங்களூருவில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு.. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

பெங்களூருவில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியையொட்டி, 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

பெங்களூருவில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியையொட்டி, 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கிலும் காலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ பெங்களூருவில் 5 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன். இதில் 32 தொகுதிகளில் பதிவான வாக்குக்ள் எண்ணப்பட உள்ளன. இதையடுத்து குறிப்பிட்ட 5 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு டிசிபி தலைமையிலான குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விவரம்:

பெங்களூருவில் ஆயுதப்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பந்தோபஸ்த்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மற்றும் மேற்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தலைமையில், 10 டி.சி.பி.,க்கள், 15  ஏசிபிகள், 38 காவல் ஆய்வாளர்கள், 250 உதவி காவல் ஆய்வாளர்கள், 1,200 போலீசார், 12 சிஆர்பிஎஃப் படையினர், 36 கேஎஸ்ஆர்பி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுவிற்பனைக்கு தடை

இதனிடையே, வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி முதல்  நாளை மாலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

73.19% வாக்குகள் பதிவு:

224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில்  2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 10ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை:

34 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அவற்றும் எண்ணும் சுற்றுகளின் எண்ணிக்கை இருக்கும். பகல் 1 மணிக்குள் மாநிலம் முழுவதும் முன்னணி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தனி ஆட்சியா?.. கூட்டணியா?..

வாக்குப்பதிவிற்கு பிறகான கருத்து கணிப்புகள் ஒரு சில காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் என கூறினாலும், பெரும்பாலானவற்றில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே, ஜேடிஎஸ் உடன் முன் கூட்டியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget