மேலும் அறிய

கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடாகவின் ஷிவமோகா மாவட்டத்தை சேர்ந்த பத்ராவதி தாலுகாவை சேர்ந்த ஒரு கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைகப்பட்டதைக் கண்ட கிராம மக்கள் விலங்கினங்கள் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அந்த கிராமத்திற்கு சென்று  சம்பவ இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நூற்ற்க்கும் அதிகமான நாய்களின் உடல்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவலர்களின் உதவியோடு உடல்களைக் கைப்பற்றினர்.


கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

முன்னதாக, கடந்த வாரம்தான் கர்நாடாகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநில உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும்  அங்கு அரங்கேறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஷிவமோகா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் லக்‌ஷ்மி பிரசாத் இது குறித்து பேசுகையில் கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எத்தனை நாய்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம், எதற்காகாக இத்தனை நாய்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றன எனும் முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை, விசாரணையின் பிறகே முழுமையான விபரங்கள் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

இதையடுத்து கிராம பஞ்சாயத்து அலுவலர்களுக்கு எதிராக விலங்கு நல ஆவலர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சில நாய்கள் உயிருடன் புதைக்கப்படிருக்கலாம் எனும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்து அலுவலர் பேசுகையில் எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, பஞ்சாயத்து நிர்வாகம் நாய்களைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ உத்தரவிடவில்லை. இந்த சம்பவத்தை செய்தது யார் எனத் தெரியவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதேபோன்ற சம்பவம் தற்போது கர்நாடாகாவிலும் அரங்கேறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget