மேலும் அறிய

கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடாகவின் ஷிவமோகா மாவட்டத்தை சேர்ந்த பத்ராவதி தாலுகாவை சேர்ந்த ஒரு கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைகப்பட்டதைக் கண்ட கிராம மக்கள் விலங்கினங்கள் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அந்த கிராமத்திற்கு சென்று  சம்பவ இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நூற்ற்க்கும் அதிகமான நாய்களின் உடல்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவலர்களின் உதவியோடு உடல்களைக் கைப்பற்றினர்.


கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

முன்னதாக, கடந்த வாரம்தான் கர்நாடாகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநில உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும்  அங்கு அரங்கேறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஷிவமோகா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் லக்‌ஷ்மி பிரசாத் இது குறித்து பேசுகையில் கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எத்தனை நாய்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம், எதற்காகாக இத்தனை நாய்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றன எனும் முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை, விசாரணையின் பிறகே முழுமையான விபரங்கள் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!

இதையடுத்து கிராம பஞ்சாயத்து அலுவலர்களுக்கு எதிராக விலங்கு நல ஆவலர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சில நாய்கள் உயிருடன் புதைக்கப்படிருக்கலாம் எனும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்து அலுவலர் பேசுகையில் எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, பஞ்சாயத்து நிர்வாகம் நாய்களைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ உத்தரவிடவில்லை. இந்த சம்பவத்தை செய்தது யார் எனத் தெரியவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதேபோன்ற சம்பவம் தற்போது கர்நாடாகாவிலும் அரங்கேறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Kutralam falls status : ’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்
’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்
Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget