மேலும் அறிய

காவல்துறையினர் கொடூரம்...தொடரும் லாக் அப் மரணங்கள்...நகை வியாபாரியின் மரணத்தை மறைக்க போலீஸ் முயற்சியா?

போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் போலீஸ் காவலில் இருந்த நகை வியாபாரி உயரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இச்சூழலில், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஆளும் பாஜக எம்பி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, 9 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 12ஆம் தேதி, பல்வந்த் சிங் என்ற நகைக்கடை வியாபாரி மீது மற்றொரு நகைக்கடைக்காரர் திருட்டு புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டின் பேரில் ரானியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு பல்வந்த் சிங் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து பல்வந்த் சிங்கின் குடும்பத்தினர் பேசுகையில், "காவல் நிலையத்தில் அவரை சந்திக்கச் சென்றபோது, ​​அவர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டோம்" குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இரவு 11 மணியளவில் இறந்துள்ளார்.

பல்வந்த் சிங்கின் மரணம் குறித்து விளக்கம் அளித்த கான்பூர் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சுனிதி, "பிரேத பரிசோதனையில் பல்வந்த் சிங் மாரடைப்பால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.

ஆனால், அவரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, முழங்கால்கள் மற்றும் கீழ் முதுகில் கடுமையான தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடலில் உள்ள தழும்புகளை குடும்பத்தினர் பார்த்தபோது, ​​​​அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை உடலை தகனம் செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில் ஒன்பது போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாஜக எம்.பி. தேவேந்திர சிங் போலேயின் தலையீட்டின் பேரில், தற்போது மீண்டும் பிரேத பரிசோதனையை டாக்டர்கள் குழு நடத்தி வருகிறது. இன்னும், அறிக்கை வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து தேவேந்திர சிங் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.

பல்வந்த் சிங்கின் உடலில் 22 ஆழமான காயங்கள் இருந்தன. உள்ளூர் அரசியலால் தூண்டப்பட்ட பொய் வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்தும் (முதலமைச்சர்) யோகி ஆதித்யநாத்திடம் தெரிவித்துள்ளேன்.

குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் தாய்க்கு சிறிது நிலம்; குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு, தாய்க்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
விமலின் அடுத்த ஃபேமிலி என்டர்டெயினர் படப்பிடிப்பு நிறைவு
விமலின் அடுத்த ஃபேமிலி என்டர்டெயினர் படப்பிடிப்பு நிறைவு
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Embed widget