மேலும் அறிய

Kanimozhi MP: மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய்; பாதிக்கப்பட்டவர்களை எப்படி தேற்றுவது என தெரியவில்லை - கனிமொழி

நாங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறிவரும்போதே, அந்த இடத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என கனிமொழி தெரிவித்தார்.

கலவர பூமியாக மாறிய மணிப்பூருக்கு எதிர்க்கட்சி எம்.பிகள் குழு சென்றிருந்தனர். அங்கிருந்து வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, “மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய் எனவும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும்போது அவர்களை எப்படி தேற்றுவது என தெரியவில்லை. பாலியல் வல்லுறுவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை பெண் எம்.பிக்கள் மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த பெண்ணின் தாயார் தனது கணவனையும் மகனையும் இழந்தும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட மகள் என அவர் பெரும் துயரத்தில் உள்ளார். அவர்களை எதைச் சொல்லி தேற்றுவது என தெரியவில்லை” என கனிமொழி கூறினார்.  

மேலும் அவர், நாங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறிவரும்போதே, அந்த இடத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனைக் கண்டித்து பெண்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை முதலமைச்சரோ அமைச்சர்களோ என யாருமே சென்று சந்திக்கவில்லை. மக்கள் இன்னும் போர்டு வைத்துக்கொண்டு மக்கள் போராடும் நிலை உள்ளது. முதலமைச்சரை, அமைச்சர்களை, எம்.எல்.ஏக்களை காணவில்லை என மக்கள் போராடிக்கொண்டுள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மிகவும் வருத்தப்படும் விஷயம் என்னவென்றால், எங்களை காப்பாற்றவேண்டிய காவல்துறையே கலவரக்காரர்களிடம் எங்களைக் கொண்டுபோய் விட்டது தான். இந்த விஷயம் வெளியான பின்னரும் கூட அந்த காவலர்களுக்கு தண்டனை எதுவும் வழங்கவில்லை என கூறியதாக கனிமொழி கூறீனார். 

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் தற்போது வன்முறையாக மாறி சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பழங்குடியின பெண்கள் அங்கு நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அங்குள்ள சூழல் தொடர்பாகவும் அறிந்து கொள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, களநிலவரம் தொடர்பாக அறிய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கனிமொழி, திருமாவளவன் அடங்கிய குழு:

அந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், ஐக்கிய ஜனதா தளத்த சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, திமுகவை சேர்ந்த கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் என மொத்தம் 20 எம்.பிக்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சென்று திரும்பியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
Embed widget