மேலும் அறிய

ஜோத்பூர் வன்முறை: நாளை வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு.. என்ன நடக்கிறது?

ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் ரம்ஜான் அன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து, நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் ரம்ஜான் அன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து, நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மே 3-ஆம் தேதி அன்று  விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் ராஜ்குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

மே 8 நள்ளிரவு முதல், ராய்காபாக் அரண்மனை பேருந்து நிலையம் மற்றும் ரைகாபாக் ரயில் நிலையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் உத்தரவின்படி, தேர்வுக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவையில் ஈடுபடும் நபர்கள், வங்கி அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள் வியாபாரிகள் செய்தித்தாள்களை விநியோகிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதர சிறப்பு சூழ்நிலைகளில், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் வெளியேசெல்ல அனுமதி வழங்க முடியும்.

இந்த உத்தரவை அடுத்து இந்த மோதல் தொடர்பாக இதுவரை 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 211 பேர் ஒட்டுமொத்தமாக இந்த விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர். 211 பேரில் 191 பேர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 151ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஜோத்பூரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) எம்.எல்.லாதர் தெரிவித்திருந்தார். ஜோத்பூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அமைதி, சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் 191 பேர் 151 பிரிவின் கீழ் மற்றும் 20 பேர் மற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று ராஜஸ்தான் டிஜிபி தெரிவித்துள்ளார்.

முதல்வர் அசோக் கெலாட்டின் சொந்த ஊரான ஜோத்பூரில் செவ்வாய்க்கிழமை ஈத் பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வன்முறை வெடித்தது, இதனால் நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி ஊரடங்கு உத்தரவை விதிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் வட்டத்தில் மதக் கொடிகளை வைப்பதில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இது கல் வீச்சுக்கு வழிவகுத்தது, இதில் ஐந்து போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜோத்பூர் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget