மேலும் அறிய

JEE Main 2023: 'ஜேஇஇ மெயின் தேர்வைத் தள்ளி வையுங்கள்'- மாணவர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்ன?

ஜேஇஇ மெயின் தேர்வின் ஜனவரி மாத அமர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

ஜேஇஇ மெயின் தேர்வின் ஜனவரி மாத அமர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு குறித்த அறிவிப்பு டிசம்பர் 15ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் தேர்வானது, ஜனவரி 24, 25, 27, 28, 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்த நிலையில் இதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு , டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன. 

முதல் அமர்வு (session 1) ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் 2ஆவது அமர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. 

இந்த நிலையில், ஜனவரி மாத ஜேஇஇ மெயின் தேர்வுக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொதுத் தேர்வுக்குத் தயாராகும் சூழலில் முதல் அமர்வுக்குப் படிக்க முடியாது என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

JEE Main 2023: 'ஜேஇஇ மெயின் தேர்வைத் தள்ளி வையுங்கள்'- மாணவர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்ன?

இதுகுறித்து postponeJEEMains உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு

ஜேஇஇ மெயின் தேர்வுக்குத் தயாராகி வரும் ரிது என்ற மாணவர் கூறும்போது, "பொறியியல் படிப்புகளைப் படித்து, பொறியாளர் ஆவது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வு. எனினும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்வு தேதி காரணமாக, அவர்களின் கனவைக் கைவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

சமூக வலைதள பயனாளியான சர்ஃபராஸ் என்பவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜேஇஇ மெயின் தேர்வில் கலந்துகொள்ள நியாயமான வாய்ப்பு கொடுக்காதது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். அதனால் ஜேஇஇ தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அனைவருக்கும் அளிக்க வேண்டும் "என்று கூறியுள்ளார். 

அழுத்தம் காரணமாக 3 மாணவர்கள் மரணம்

அகில இந்திய பெற்றோர் சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான அனுபா சஹாய் கூறும்போது, "மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர். இந்த விவகாரம் சிக்கலான ஒன்று. சில நாட்களுக்கு முன்பு, பயிற்சி மையங்களின் தலை நகரமான கோட்டாவில் அழுத்தம் காரணமாக 3 மாணவர்கள் இறந்துள்ளனர்.  

2023 க்யூட் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையே ஏன் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் மேற்கொள்ளக் கூடாது? அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் சமத்துவத்தைப் பேண வேண்டும்" என்று அனுபா தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget