மேலும் அறிய

Lander Rover: சிக்னல் அனுப்பாத சந்திரயான் 3.. சோகத்தில் விஞ்ஞானிகள்.. இஸ்ரோ புதிய தகவல்

லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 

நிலவில் கனிமங்கள் இருப்பதை உறுதி செய்த சந்திரயான்-3

இதையடுத்து லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிலவில் பல்வேறு கனிமங்களுடன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: IND vs AUS 1st ODI LIVE Score: சுப்மன்கில், ருதுராஜ் அடுத்தடுத்து அரைசதம்.. தடுமாறும் ஆஸ்திரேலிய பவுலர்கள்..!

அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நிலவின் சூரிய ஒளி மறையும் சூழல் தொடங்கியதால், கடந்த 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அடுத்தடுத்து ஸ்லீப் மோடிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சூழலில், கடந்த 20ஆம் தேதி முதல் நிலவின் மேற்பகுதியில் மீண்டும் சூரிய ஒளி பட தொடங்கியுள்ளது. இதனால், லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. 

லேண்டரையும் ரோவரையும் செயல்பட வைக்க முயற்சி:

இந்த நிலையில், ஸ்லீப் மோடில் உள்ள விக்ரம் லேண்டரையும் பிரக்யான் ரோவரையும் செயல்பட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், தற்போது வரை அதிலிருந்து சிக்னல் வரவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் சூரிய ஒளியே படாததாலும் அந்த பகுதியில் மைனஸ் 120 டிகிரி முதல் மைனஸ் 200 டிகிரி வரையிலான கடும் குளிர் நிலவியதாலும் ஏற்பட்ட தாக்கத்தை கடந்து பிரக்யான் ரோவர் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏன் என்றால், ரோவரில் உள்ள சாதனங்கள் இந்த கடும் குளிரால் உறைந்து செயலற்று போக அதிக வாய்ப்புள்ளதாகவே அறிவியல் சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் சாதனை படைக்குமா இஸ்ரோ?

ஒருவேளை இஸ்ரோ பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பட வைத்தால், அதில் உள்ள சாதனங்கள் மூலம் மேலும் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடியும். இது இந்தியாவிற்கான போனஸாகவே கருத முடியும். காரணம் ஏற்கனவே இந்த ரோவர் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அது மீண்டும் செயல்பட தொடங்கினால், அடுத்த 14 நாட்களுக்கும் நிலவின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் அங்கு உள்ள கனிமங்கள் மற்றும் வாயுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை இஸ்ரோவால் சேகரிக்க முடியும்.

இதையும் படிக்க: Vanathi Srinivasan: காலில் விழுந்த வானதி சீனிவாசன்.. கடுப்பான பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget