மேலும் அறிய

Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!

ஈஷா குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் மேல்முறையிட்ட நிலையில், விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஈஷா குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்.3) மேல் முறையீடு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இன்றே இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா யோகா மையம் மீதான குற்ற வழக்குகள் குறித்து விசாரித்து அக்டோபர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஈஷா யோகா மையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜர் ஆனர். அவர் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் பொறியாளர்கள் எனவும் விருப்பப்பட்டே துறவறம் மேற்கொண்டதாகக் கூறினார். தேவையானால் ஆன்லைனில் ஆஜர் ஆகவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்

மத்திய அரசு சார்பில் சாலிசிட்டர் ஜெனரல் கூறும்போது, ’’சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார். 

தொடர்ந்து இரு பெண்களும் ஆன்லைனில் ஆஜராகி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசினர். அவர்கள், 8 ஆண்டுகளாக தந்தை தரப்பில் இருந்து துன்புறுத்தல் தொடர்வதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

பின்னணி என்ன?

கோவை, ஈஷா யோகா மையம் மீது அடிக்கடி சர்ச்சைகள் எழும் நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தன்னுடைய மகள்களான கீதா மற்றும் லதா இருவரையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த ஆட்கொணர்வு மனுவுடன் சேர்த்து, ஈஷா யோகா மையத்தின் மீதான பல குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த வழக்கை செப்.30 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் இரண்டு மகள்களிடமும் நேரில் விசாரணை நடத்திய பிறகு, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதை அடுத்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கோவை எஸ்பி, டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.  

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
Embed widget