மேலும் அறிய

India vs Canada Issue: ”தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதீர்கள்” - கனடா பிரச்னைக்கு மத்தியில் ஊடகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதிர்கள் என தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கனடா உடனான பிரச்னைக்கு மத்தியில் தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதிர்கள் என தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு அறிவுரை:

காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான கருத்து மோதல் வலுப்பெற்று, இருநாடுகளும் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். இதன் விளைவாக தான்,  தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபர்களை நேர்காணல் செய்வதைத் தவிர்க்குமாறு தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அரசு சொல்வது என்ன?

இதுதொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள  அறிவுறுத்தலில், இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ள, வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒரு தொலைக்காட்சியின் விவாதத்திற்கு அழைக்கப்பட்டது  அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நாட்டின் இறையாண்மை/ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, வெளி நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு மற்றும் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள பல கருத்துக்கள்/கருத்துகளை மேற்படி நபர் கூறியுள்ளார்.

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது மற்றும் அரசியலமைப்பின் கீழ் அதன் உரிமைகளை மதிக்கிறது. தொலைகாட்சி ஊடகங்களால் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கம் பிரிவு 20 இன் துணைப் பிரிவு (2) உட்பட CTN சட்டம், 1995 இன் விதிகளுக்கு இணங்க வேண்டும்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் கடுமையான குற்றங்கள்/தீவிரவாத குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள்/குறிப்புகள் மற்றும் பார்வைகள்/நிகழ்ச்சி நிரல்களுக்கு எந்த தளத்தையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 19(2) பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள் மற்றும் CTN சட்டத்தின் பிரிவு 20 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நியாயமான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்ட்ன் பாதுகாப்பு, எந்தவொரு வெளிநாட்டுடனான இந்தியாவின் நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது அறநெறி ஆகியவற்றின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது” என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்?

குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சீக்கிய தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  அவர் சீக்கியர்களுக்கான நீதிக் குழுவின் தலைவராக உள்ளார். 2019 இல் காலிஸ்தான் ஆதரவு குழு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பன்னுன் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். காலிஸ்தான் விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி கனடாவை சேர்ந்தவர்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. கனடா தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Theni Murder : 2 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 3 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை.! பீதியில் மக்கள்- தேனியில் நடந்தது என்ன.?
2 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 3 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை.! வெளியான ஷாக் தகவல்- தேனியில் நடந்தது என்ன.?
Embed widget