மேலும் அறிய

Amar Jawan Jyoti: 50 ஆண்டுகள்... இன்று அணைகிறது அழியா சுடரான அமர் ஜவான் ஜோதி.. நெகிழ்ச்சி பின்னணியும், வலுக்கும் கண்டனங்களும்..

இன்று,பாதுகாப்பு படை தலைவர்கள் குழுவின்(CISC), ஒருங்கிணைந்த தலைவர் முன்னிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள சுடர், வெற்றி ஓட்டம் மூலம் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது

தேசிய தலைநகர் புதுதில்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி (அழியாத படை வீரரின் சுடர்) நினைவகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் தீப்பிழம்பினை அணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி  இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளை நினைவு கூறும் வகையில், குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், டெல்லி ராஜபாதையில் ராணுவ அணிவகுப்பும், நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும்.

Amar Jawan Jyoti: 50 ஆண்டுகள்... இன்று அணைகிறது அழியா சுடரான அமர் ஜவான் ஜோதி.. நெகிழ்ச்சி பின்னணியும், வலுக்கும் கண்டனங்களும்..

பொதுவாக, இந்த அணி வகுப்பு இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் தொடங்குகிறது. அங்கு பாரதப் பிரதமர் நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின், நாட்டின் குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார். 

Amar Jawan Jyoti: 50 ஆண்டுகள்... இன்று அணைகிறது அழியா சுடரான அமர் ஜவான் ஜோதி.. நெகிழ்ச்சி பின்னணியும், வலுக்கும் கண்டனங்களும்..

இந்நிலையில், இந்தாண்டு குடியரசுத் தின விழாவில், அமர் ஜவான் ஜோதி நினைவகத்தில் உள்ள தீப்பிழம்பு (அணையா விளக்கு), 2019-ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவு சின்னத்திற்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமர் ஜோதி ஜவான்: 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது இறந்த இந்திய ஆயுதப்படைகளின் தியாகிகள் மற்றும் அறியப்படாத வீரர்களை நினைவுகூரும் வகையில் அமர் ஜவான் ஜோதி  நினைவுச்சின்னம் இந்திய கேட்டில் கட்டப்பட்டது. இதனை 1972 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி திறந்து வைத்தார்.

"அமர் ஜவான்" (அழியாத படை வீரர்) என்று கல்லறையின் நான்கு பக்கங்களிலும் தங்கத்தால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியின் மீது எல் 1 சுய-ஏற்றுதல் துப்பாக்கி நின்ற நிலையில் காணப்படுகிறது. அதில் அடையாளம் காணமுடியாத படை வீரர் ஒருவரின் தலைக்கவசம் காணப்படுகிறது. பீடத்தில் நான்கு அடுப்புகள் பிணைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது. அது 1971 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இயற்கை எரிவளி மூலமாக தீப்பிழம்புடன் எரிந்து கொண்டிருக்கிறது.

தேசிய போர் நினைவு சின்னம்:

சுதந்திரத்திற்கு பிறகு நாட்டைக் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த  வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதிநவீன வடிவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அமைதி காக்கும் படைகள் (Peace Keeping Missions) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பங்கேற்று, அதிகபட்ச தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறுவதாகவும் இந்த தேசிய போர் நினைவுச் சின்னம் அமைகிறது. 

Amar Jawan Jyoti: 50 ஆண்டுகள்... இன்று அணைகிறது அழியா சுடரான அமர் ஜவான் ஜோதி.. நெகிழ்ச்சி பின்னணியும், வலுக்கும் கண்டனங்களும்..

 இந்த தேசிய போர் நினைவுச் சின்னம், ‘அமர் சக்ரா’ அல்லது அழியா வட்டம், ‘வீர் சக்ரா’ அல்லது துணிச்சல் வட்டம், ‘தியாக சக்ரா’ அல்லது தியாக வட்டம், ‘ரக்ஷா சக்ரா’ அல்லது பாதுகாப்பு வட்டம் என்ற நான்கு வட்டங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்தியில் அமைந்த நினைவுத்தூண், அணையா விளக்கு, இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைகள் சந்தித்த முக்கிய போர்களை சித்தரிக்கும் வெண்கலத்தாலான ஆறு சித்திரங்கள் இந்த தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இடம்பெற்றுள்ளன. 

Amar Jawan Jyoti: 50 ஆண்டுகள்... இன்று அணைகிறது அழியா சுடரான அமர் ஜவான் ஜோதி.. நெகிழ்ச்சி பின்னணியும், வலுக்கும் கண்டனங்களும்..

 

இன்று அணைகிறது: 

இந்நிலையில், ஒரே இந்திய கேட்டில் இரண்டு நினைவுச் சின்னம் இருப்பது அவசியமற்றதாக மத்திய அரசு உணர்கிறது. மேலும், 2019ல் கட்டப்பட்ட போர் நினைவுச் சின்னமே சுதந்திர இந்தியாவின் ஒட்டுமொத்த விருப்பத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்றும் கருதுகிறது. இதனையடுத்து, இன்று மாலை 3.30 மணியளவில் பாதுகாப்பு படை தலைவர்கள் குழுவின்(CISC) , ஒருங்கிணைந்த தலைவர் முன்னிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள சுடர், வெற்றி ஓட்டம் மூலம் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.  அங்குள்ள, அணையா விளக்குடன் மரபு தழுவிய முறையில் இந்த சுடர் ஒன்றிணைக்கப்படுகிறது. 

எதிர்ப்பு: 

'புது இந்தியா' என்ற பெயரில் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மத்திய அரசு மாற்றியமைத்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Low Pressure Area: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்ட பாருங்க
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
Embed widget