மேலும் அறிய

India China Talks: முடிவுக்கு வருகிறதா இந்திய, சீன எல்லை பிரச்னை? பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்.. நடந்தது என்ன?

கல்வான் மோதலை தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அத்தமீறலின் உச்சக்கட்டமாக, கடந்த 2020ஆம் ஆண்டு, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால், 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு கூறி வருகிறது.

இந்த விவகாரத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பதற்றத்தை ஏற்படுத்திய கல்வான் மோதல்:

கல்வான் மோதலை தொடர்ந்து, இந்திய - சீன எல்லைபகுதியில் 68,000க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாக மிகக் குறைந்த காலகட்டத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், 90 பீரங்கிகள், சுமாா் 330 தாக்குதல் போா்த் தளவாடங்கள் உள்ளிட்டவை எல்லைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இருதரப்பு மோதலுக்குப் பிறகு ரஃபேல், மிக்-29, சுகோய்-30 எம்கேஐ, ஜாகுவாா் ரக போா் விமானங்கள் எல்லைப் பகுதிகளில் தொடா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மோதல் ஏற்பட்ட உடனேயே, எதிரிகளின் போா் விமானங்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளையும் இந்திய விமானப்படையானது எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தியது.

முடிவுக்கு வருகிறதா இந்திய, சீன எல்லை பிரச்னை?

இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரச்னையை தீர்க்க இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதம் 13, 14 தேதிகளில், இரு நாடுகளுக்கிடையே ராணுவ தளபதிகள் மட்டத்தில் 19ஆவது கட்ட பேச்சுவார்த்தை, இந்திய எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோவில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "மேற்கு செக்டாரில் இந்திய சீன எல்லை (உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு) பகுதியில் மீதமுள்ள சச்சரவுகளை தீர்ப்பது குறித்து இரு தரப்பும் நேர்மறையான, ஆக்கபூர்வமான, ஆழமான பேச்சுவார்த்தை மேற்கொண்டன. 

தலைமையின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படையான, முன்னோக்கி எடுத்து செல்லும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
மீதமுள்ள பிரச்னைகளை விரைவாக தீர்க்கவும், ராணுவ மற்றும் தூதரக வழியாக பேச்சுவார்த்தையை விரைவாக முன்னேடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பிலான 18ஆவது கட்ட பேச்சுவார்த்தை சீன எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கு செக்டாரில் இந்திய, சீன நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்னகளை தீர்ப்பது குறித்து இரு தரப்பும் வெளிப்படையான, ஆழமான பேச்சுவார்த்தை 
மேற்கொண்டன.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget