மேலும் அறிய

Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை, ஆங்கிலேயர்கள் கட்டிய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

17ம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையானது, தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலமாக செயல்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர்களின் வருகை:

கி.பி. 1600 ஆண்டில் இந்தியா உள்ளிட்ட கிழக்கு திசை நாடுகளுடன் வணிகம் செய்வதற்கான அனுமதியை, இங்கிலாந்து ராணியிடம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அனுமதி பெற்றது, கடல் வழியாக வந்தவர்கள், முதன் முதலாக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வந்தடைந்தனர். அப்போது, 1613 ஆம் ஆண்டு ஆட்சி புரிந்து கொண்டிருந்த முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் வணிகம் செய்ய அனுமதி பெறுகின்றனர்.


Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

பின்னர் படிப்படியாக, அவர்கள் வணிகத்தை ஆக்ரா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தினர். அப்போது கிழக்கு நாடுகளான இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத்தை எளிமையாக மேற்கொள்ளவும், இந்தியாவுடன் வணிகத்தை இணைத்து கொள்ள ஏதுவாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வணிக தளத்தை அமைக்க விரும்புகின்றனர்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை:

அதையடுத்து மதராஸ் பட்டினத்தை நிர்வாகித்த வேஙகடப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து, ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட நிலத்தை வாங்குகியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே என்பவர் 1639-40 ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார். புனித ஜார்ஜ் தினத்தன்று இக்கோட்டை கட்டப்பட்டதால், அப்பெயர் பெற்றதாகவும் , அப்போதைய காலத்தில் சுமார் 2 லட்சத்து 45 ஆயிரத்து 514 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

இந்த கோட்டையானது, ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கும், அவர்களது பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தி கொண்டனர். அதையடுத்து, இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். பின்னர்  இக்கோட்டையைச் சுற்றி கிராமங்கள் உருவாக ஆரம்பித்து சென்னை உருவானது என்றும் கூறப்படுகிறது.

இக்கோட்டைதான், தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலமாகவும், சட்டப்பேரவை அலுவலகமாகவும் மற்றும அமைச்சர்களின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கோட்டையில் முக்கிய மூன்று கட்டடங்கள் உள்ளன

  1. புனித மேரி கிறிஸ்தவ ஆலயம்
  2. கிளைவ் மாளிகை
  3. கோட்டை அருங்காட்சியகம்

புனித மேரி கிறிஸ்தவ ஆலயத்தில் தான், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக இருந்த ராபர்ட் கிளைவ்வின் திருமணம் நடைபெற்றது. கோட்டை அருங்காட்சியகத்தில், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், ஆயுதங்கள், ஆடைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

மேலும், இந்தியா சுதந்திரமடைந்த பின், கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, இன்றும் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள அருங்காட்சியகத்துக்குள் சென்று, வரலாற்று சான்றுகளை பார்த்துவிட்டு வாருங்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget