மேலும் அறிய

Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை, ஆங்கிலேயர்கள் கட்டிய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

17ம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையானது, தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலமாக செயல்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர்களின் வருகை:

கி.பி. 1600 ஆண்டில் இந்தியா உள்ளிட்ட கிழக்கு திசை நாடுகளுடன் வணிகம் செய்வதற்கான அனுமதியை, இங்கிலாந்து ராணியிடம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அனுமதி பெற்றது, கடல் வழியாக வந்தவர்கள், முதன் முதலாக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வந்தடைந்தனர். அப்போது, 1613 ஆம் ஆண்டு ஆட்சி புரிந்து கொண்டிருந்த முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் வணிகம் செய்ய அனுமதி பெறுகின்றனர்.


Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

பின்னர் படிப்படியாக, அவர்கள் வணிகத்தை ஆக்ரா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தினர். அப்போது கிழக்கு நாடுகளான இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத்தை எளிமையாக மேற்கொள்ளவும், இந்தியாவுடன் வணிகத்தை இணைத்து கொள்ள ஏதுவாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வணிக தளத்தை அமைக்க விரும்புகின்றனர்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை:

அதையடுத்து மதராஸ் பட்டினத்தை நிர்வாகித்த வேஙகடப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து, ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட நிலத்தை வாங்குகியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே என்பவர் 1639-40 ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார். புனித ஜார்ஜ் தினத்தன்று இக்கோட்டை கட்டப்பட்டதால், அப்பெயர் பெற்றதாகவும் , அப்போதைய காலத்தில் சுமார் 2 லட்சத்து 45 ஆயிரத்து 514 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

இந்த கோட்டையானது, ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கும், அவர்களது பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தி கொண்டனர். அதையடுத்து, இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். பின்னர்  இக்கோட்டையைச் சுற்றி கிராமங்கள் உருவாக ஆரம்பித்து சென்னை உருவானது என்றும் கூறப்படுகிறது.

இக்கோட்டைதான், தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலமாகவும், சட்டப்பேரவை அலுவலகமாகவும் மற்றும அமைச்சர்களின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கோட்டையில் முக்கிய மூன்று கட்டடங்கள் உள்ளன

  1. புனித மேரி கிறிஸ்தவ ஆலயம்
  2. கிளைவ் மாளிகை
  3. கோட்டை அருங்காட்சியகம்

புனித மேரி கிறிஸ்தவ ஆலயத்தில் தான், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக இருந்த ராபர்ட் கிளைவ்வின் திருமணம் நடைபெற்றது. கோட்டை அருங்காட்சியகத்தில், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், ஆயுதங்கள், ஆடைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


Independence Day related content: தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தை கட்டிய ஆங்கிலேயர்கள்; ஒரு சென்னை கதை..

மேலும், இந்தியா சுதந்திரமடைந்த பின், கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, இன்றும் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள அருங்காட்சியகத்துக்குள் சென்று, வரலாற்று சான்றுகளை பார்த்துவிட்டு வாருங்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget