மேலும் அறிய

Indian National Flag: கொண்டாட்டத்தில் இந்தியா! மூவர்ணம் ஏன்? தேசியக்கொடியின் வரலாறு இதுதான்!

இந்த சிறப்பான நாளில் தேசியக்கொடியின் வரலாற்றையும் அது எப்படி பரிணாம வளர்ச்சி பெற்று இந்த நிறங்களை அடைந்தது என்று பார்க்கலாம்.

நாளை, ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை) அன்று இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராக உள்ளது. இந்நிகழ்ச்சியில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடிகளை பறக்கவிடுவதை ஊக்குவிக்கும் வகையில், மோடி ஆகஸ்ட் 2 ஆம் தேதி 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த சிறப்பான நாளில் தேசியக்கொடியின் வரலாற்றையும் அது எப்படி பரிணாம வளர்ச்சி பெற்று இந்த நிறங்களை அடைந்தது என்று பார்க்கலாம்.

Indian National Flag: கொண்டாட்டத்தில் இந்தியா! மூவர்ணம் ஏன்? தேசியக்கொடியின் வரலாறு  இதுதான்!

முதல் தேசியக்கொடி

இந்திய தேசியக் கொடியானது இன்று இருக்கும் நிலைக்கு வருவதற்கு, தொடர்ச்சியான மாறுபாடுகளைக் கடந்து பயணிக்க வேண்டியிருந்தது. இந்தியாவின் முதல் தேசியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் (கிரீன் பார்க்) ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தேசியக் கொடியானது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று கிடைமட்ட கோடுகளால் ஆனதாக இருந்தது.

Indian National Flag: கொண்டாட்டத்தில் இந்தியா! மூவர்ணம் ஏன்? தேசியக்கொடியின் வரலாறு  இதுதான்!

இரண்டாவது மற்றும் மூன்றாவது தேசியக்கொடி

இரண்டாவது தேசியக் கொடி 1907 இல் மேடம் காமா மற்றும் அவரது நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்களின் குழுவால் பாரிஸில் ஏற்றப்பட்டது. இந்தக் கொடி முதல் கொடியைப் போலவே இருந்தது, பெரிய மாற்றங்கள் இல்லை. மேல்புறத்தில் உள்ள தாமரை மட்டும் நட்சத்திரங்களாக மாற்றப்பட்டது, இது சப்தரிஷியைக் குறிக்கிறது. மூன்றாவது கொடி டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோரால் 1917 ஆம் ஆண்டில் ஹோம் ரூல் இயக்கத்தின் போது ஏற்றப்பட்டது. இந்தியாவில் அரசியல் போராட்டம் ஒரு பெரும் திருப்பத்தை எடுத்துக்கொண்டிருந்த நேரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடி முதல் இரண்டில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இதில் சிவப்பு மற்றும் பச்சை கிடைமட்ட கோடுகள் இருந்தன, சப்தரிஷி அமைப்பில் ஏழு நட்சத்திரங்கள், வெள்ளை பிறை நிலவோடு இடம்பெற்றது.

தொடர்புடைய செய்திகள்: வெளிநாட்டு டி20 தொடர்களில் தோனி அங்கம் வகிக்க வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்.. அது என்ன?

காந்தி கருத்து

இதனிடையே இந்தியாவிற்கு ஏன் சொந்தக் கொடி இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி ஒருமுறை கூறியது குறிப்பிடத்தக்கது, "ஒரு கொடி அனைத்து நாடுகளுக்கும் அவசியம். அதற்காக மில்லியன் கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இது ஒரு வகையான உருவ வழிபாடு என்பதில் சந்தேகமில்லை, ஆனாலும் இந்தியர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிகள் என எல்லோருக்கும் இந்தியா தாயகமாக இருக்கின்றது. வாழ்வதற்கும் இறப்பதற்கும் பொதுவான கொடியை அங்கீகரிப்பது அவசியம்", என்று கூறினார்.

Indian National Flag: கொண்டாட்டத்தில் இந்தியா! மூவர்ணம் ஏன்? தேசியக்கொடியின் வரலாறு  இதுதான்!

நான்காவது பரிணாமம்

பின்னர், நான்காவது கொடி 1921 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆந்திர இளைஞர் ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வின் போது ஒரு கொடியைத் தயாரித்து மகாத்மா காந்தியிடம் கொண்டு சென்றார். நாட்டின் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு வண்ணங்களைக் கொண்ட கொடி. எஞ்சியிருக்கும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வெள்ளைக் கீற்றையும், நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் சுழலும் சக்கரத்தையும் காந்தி அதில் சேர்த்தார். 1931 ஆம் ஆண்டு அந்த மூவர்ணத்தை தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இந்திய தேசியக் கொடியின் பரிணாம வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது.

Indian National Flag: கொண்டாட்டத்தில் இந்தியா! மூவர்ணம் ஏன்? தேசியக்கொடியின் வரலாறு  இதுதான்!

இன்றைய தேசியக்கொடி

மூவர்ணக் கொடியில் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறப் பட்டைகள், மகாத்மா காந்தியின் நூற்பு சக்கரத்தை மையமாக வைத்திருந்தது. கொடியானது வகுப்புவாத முக்கியத்துவத்தை கொண்டிருக்கவில்லை என்றும், அப்படி புரிந்துகொள்ளப்பட்டால் அது விளக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டது. இறுதியாக, இன்றைய மூவர்ணக் கொடி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வந்தது. முந்தைய கொடியின் நிறமும் முக்கியத்துவமும் அப்படியே வைத்து, அசோக சக்கரவர்த்தியின் தர்ம சர்க்கா சுழலும் சக்கரம், கொடியின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றைய தேசியக் கொடியானது, மேலே காவியும், நடுவில் வெள்ளையும், கீழே கரும் பச்சையும் கொண்ட கிடைமட்ட மூவர்ணக் கொடியாகும். சக்கரத்தை குறிக்கும் கடற்படை நீல சக்கரம் வெள்ளை பட்டையின் நடுவில் உள்ளது. மேலே உள்ள குங்குமப்பூ நாட்டின் வலிமையையும் தைரியத்தையும் குறிக்கிறது; வெள்ளை அமைதி மற்றும் உண்மையை குறிக்கிறது; மற்றும் பச்சை என்பது நமது நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் பசுமையை குறிக்கிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget