மேலும் அறிய

UP Encountres: யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகள் ஆட்சி... 10 ஆயிரம் என்கவுண்டர்கள்..! என்ன நடக்குது உ.பியில்?

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் யோகி ஆதித்யநாத் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அம்மாநில தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

என்கவுண்டர்கள்:

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்பாக உத்தரபிரதேச அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்த மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் குற்றவாளிகள் மீது போலீசாரால் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டர்கள் பட்டியலில் மொத்தம் 63 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்திலே அதிகளவில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட நகரமாக மீரட் உள்ளது. 2017ம் ஆண்டு முதல் மீரட்டில் மட்டும் 3152 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் முயற்சியில் மொத்தம் 1708 குற்றவாளிகள் காயம் அடைந்துள்ளனர்.

மீரட், ஆக்ரா, ரேபரெலி:

இந்த என்கவுண்டர் சம்பவத்தில் மொத்தம் 401 காவல்துறையினர் காயம் அடைந்ததாகவும், ஒரு போலீசார் வீரமரணம் அடைந்ததாகவும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் 2017ம் ஆண்டு முதல் மொத்தம் நிகழ்த்தப்பட்ட 10 ஆயிரத்து 713 என்கவுண்டரில் மீரட் நகருக்கு அடுத்தபடியாக ஆக்ரா காவல்துறையினர் 1844 என்கவுண்டர் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர்.

ஆக்ராவில் 4 ஆயிரத்து 654 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  55 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். பேரெலியில் நிகழ்த்தப்பட்ட 1497 என்கவுண்டர் சம்பவங்களில், 3410 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 437 குற்றவாளிகள் காயம் அடைந்தனர்.  இதில், 296 காவல்துறையினர் காயம் அடைந்த நிலையில், ஒரு போலீசார் வீரமரணம் அடைந்தார்.

10 ஆயிரம் என்கவுண்டர்கள்:

உத்தரபிரதேச மாநில அரசு எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கூறி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றச்சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்து வருவதாக அடிக்கடி செய்திகளும் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் 6 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ல் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற மூத்த தலைவர்கள் உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை பாராட்டினர். தற்போது அவர்களது பாராட்டையும், இந்த என்கவுண்டர் முயற்சியையும் ஒப்பிட்டு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

 

மேலும் படிக்க: South Korea Marriages : வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான திருமணங்கள்...சிக்கி தவிக்கும் தென்கொரியா..!

மேலும் படிக்க: Covid : தொடர் அச்சம்...மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு... தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget