மேலும் அறிய

UP Encountres: யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகள் ஆட்சி... 10 ஆயிரம் என்கவுண்டர்கள்..! என்ன நடக்குது உ.பியில்?

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் யோகி ஆதித்யநாத் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அம்மாநில தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

என்கவுண்டர்கள்:

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்பாக உத்தரபிரதேச அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்த மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் குற்றவாளிகள் மீது போலீசாரால் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டர்கள் பட்டியலில் மொத்தம் 63 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்திலே அதிகளவில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட நகரமாக மீரட் உள்ளது. 2017ம் ஆண்டு முதல் மீரட்டில் மட்டும் 3152 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் முயற்சியில் மொத்தம் 1708 குற்றவாளிகள் காயம் அடைந்துள்ளனர்.

மீரட், ஆக்ரா, ரேபரெலி:

இந்த என்கவுண்டர் சம்பவத்தில் மொத்தம் 401 காவல்துறையினர் காயம் அடைந்ததாகவும், ஒரு போலீசார் வீரமரணம் அடைந்ததாகவும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் 2017ம் ஆண்டு முதல் மொத்தம் நிகழ்த்தப்பட்ட 10 ஆயிரத்து 713 என்கவுண்டரில் மீரட் நகருக்கு அடுத்தபடியாக ஆக்ரா காவல்துறையினர் 1844 என்கவுண்டர் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர்.

ஆக்ராவில் 4 ஆயிரத்து 654 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  55 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். பேரெலியில் நிகழ்த்தப்பட்ட 1497 என்கவுண்டர் சம்பவங்களில், 3410 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 437 குற்றவாளிகள் காயம் அடைந்தனர்.  இதில், 296 காவல்துறையினர் காயம் அடைந்த நிலையில், ஒரு போலீசார் வீரமரணம் அடைந்தார்.

10 ஆயிரம் என்கவுண்டர்கள்:

உத்தரபிரதேச மாநில அரசு எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவ்வப்போது கூறி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றச்சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்து வருவதாக அடிக்கடி செய்திகளும் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் 6 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ல் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற மூத்த தலைவர்கள் உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை பாராட்டினர். தற்போது அவர்களது பாராட்டையும், இந்த என்கவுண்டர் முயற்சியையும் ஒப்பிட்டு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

 

மேலும் படிக்க: South Korea Marriages : வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான திருமணங்கள்...சிக்கி தவிக்கும் தென்கொரியா..!

மேலும் படிக்க: Covid : தொடர் அச்சம்...மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு... தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget