மேலும் அறிய

Crime: மும்பை ஐ.ஐ.டி.யில் 18 வயது மாணவன் தற்கொலை..! சாதிய பாகுபாடு காரணமா? தொடரும் அவலம்..!

மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

ஐ.ஐ.டி.யில் தொடரும் தற்கொலைகள்:

அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் குறிப்பு எதையும் விட்டு செல்லவில்லை. விபத்து மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மன அழுத்தமா?

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "அகமதாபாத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி. பிடெக் மாணவர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்தார். அவரது முதல் செமஸ்டர் தேர்வுகள் சனிக்கிழமை முடிந்தது. அழுத்தம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்"

மாணவர் அமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கையில், "தர்ஷன் சோலங்கி என்ற 18 வயது தலித் மாணவன், 3 மாதங்களுக்கு முன் ஐஐடி மும்பையில் BTech படிப்பிற்காக சேர்ந்துள்ளார். அவருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். 

கேலி:

இது ஒரு தனிப்பட்ட/தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக ஒரு நிறுவன கொலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் புகார்கள் அளித்த போதிலும், தலித், பகுஜன், ஆதிவாசி மாணவர்கள் உள்ளடங்கிய பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு கல்லூரி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. 

இடஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வுகளை தூண்டி தகுதியில்லாதவர்கள், தகுதியற்றவர்கள் என்று கேலி செய்வதால் முதலாம் ஆண்டு மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு பிரிதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை" என குறிப்பிட்டுள்ளது.

 

அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "SC/ST சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் பெரும் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது மறைக்கப்படாத உண்மை" என குறிப்பிட்டுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.