மேலும் அறிய

கவுண்டர் டூ பிராமணர்.. இந்தியாவில் மொத்தம் 46 லட்சம் ஜாதிகள் இருக்காம்.. தெரிஞ்சுக்கோங்க

கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் (SECC) இந்தியா முழுவதும் மொத்தம் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கும் சூழலில், கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் (SECC) இந்தியா முழுவதும் மொத்தம் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், பனியா, கவுண்டர், பிராமணர் என இந்தியா முழுவதும் 4,147 ஜாதிகள் மட்டுமே இருந்துள்ளது.

கவுண்டர் டூ பிராமணர்:

இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக ஜாதி உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கிறது. இப்படியிருக்க, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இருப்பினும், எத்தனை சாதிகள் இருக்கிறது என்ற கணக்கெடுப்பு சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்டதில்லை. வெறும் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றிய கணக்கெடுப்பு மட்டுமே எடுக்கப்பட்து வருகிறது. கடைசியாக, கடந்த 1931ஆம் ஆண்டு, அனைத்து ஜாதிகளின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில்தான், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இவர்களின், உண்மையான மக்கள் தொகை என்ன என்பது தெரியாத சூழலில், அதனை கணிக்கிடும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

46 லட்சத்திற்கு மேற்பட்ட ஜாதிகள்:

இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் இருந்தது. இதற்கிடையே, மாநில அரசுகளே (பீகார், கர்நாடகா) எத்தனை ஜாதிகள் இருக்கிறது என்ற ஆய்வினை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், பீகாரில் இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டது. 

இந்த சூழலில்தான், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் எத்தனை ஜாதிகள் இருக்கிறது என்ற கணக்கெடுப்பு நடத்தப்படும் என மோடி தலைமையிலான அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த 2011ஆம் ஆண்டு, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில், இந்தியா முழுவதும் மொத்தம் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் 4,147 ஜாதிகள் மட்டுமே இருந்துள்ளது. 

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் எப்படி 4 லட்சத்திற்கு அதிகமான ஜாதிகள் உருவானது என்பது குறித்து விளக்கிய அதிகாரி ஒருவர், "சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் ஜாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி தெளிவாக இல்லை. தங்களின் சாதி என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எடுத்துக்காட்டாக, குப்தா, அகர்வால் என பதில் அளித்திருக்கின்றனர். ஆனால், குப்தா, அகர்வால் ஆகிய இரண்டு பிரிவுகளும் பனியா சாதியின் கீழ் வருகிறது. இதன் காரணமாகவே, ஜாதிகளின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாக கணக்கிடப்பட்டது.

மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 2,650 சாதிகள் இருக்கின்றன. பட்டியலின பிரிவில் 1,170 சாதிகளும் பழங்குடியின பிரிவில் 890 சாதிகளும் இருக்கின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை பொறுத்தவரையில், மாநில அரசுகள் தனியே ஒரு பட்டியலை வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget