மேலும் அறிய

Inactive PAN: ஆதார் - பான் கார்டை இணைக்கவில்லையா? எப்படி எல்லாம் பணம் பறிபோகும் தெரியுமா? இதுக்கு 20% கட்டணும்..

செயலிழந்த பான் கார்ட் கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செயலிழந்த பான் கார்ட் கொண்டுள்ள பயனாளர்கள்  வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆதார் - பான் இணைப்பு:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்ட்கள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதனை மீண்டும் செயல்படுத்த ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துவதோடு, 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பயனாளர்கள் பல முக்கிய பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு, சேமித்த வைத்த பணத்திற்கே கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

20% டிடிஎஸ்:

வங்கியில் நிரந்தர வைப்புத்தொகை திட்டத்தை வைத்திருப்பவராக இருந்து, நீங்கள் ஆதாருடன் இணைக்கப்படாததன் காரணமாக உங்களது பான்-கார்ட் செயலிழந்து இருந்தால், உங்களால் 15GH படிவத்தை இனி சமர்பிக்க முடியாது. இதனால், வழக்கமாக விதிக்கப்படும் டிடிஎஸ் (TDS) ஆன 10 சதவிகிதத்திற்கு பதிலாக 20 சதவிகித டிடிஎஸ் கட்டணம் வசூலிக்கப்படும். 

டிடிஎஸ் விவரங்கள்:

நிரந்தர வைப்புத்தொகை மூலம் ஒரு நிதியாண்டிற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான வட்டியை வருவாயாக ஈட்டினால், பயனாளர் டிடிஎஸ் செலுத்த வேண்டியது கட்டாயம். உங்களது வங்கிக் கணக்கு பான் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால், 15GH படிவத்தை சமர்பித்து வரிவிலக்கு பெற்று 10 சதவிகித டிடிஎஸ் மட்டும் செலுத்தலாம். ஒருவேளை, உங்களது வங்கி கணக்குடன் பான் எண் இணைக்காவிட்டால், 20 சதவிகிதம் அளவிற்கு நீங்கள் டிடிஎஸ் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

இந்த நிலையில் எச்டிஎஃப்சி வங்கி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி “ஆதாருடன் இணைக்கப்படாததால் பான் கார்ட் செயல்படாமல் போயிருந்தால், பயனாளர்கள் தங்களது நிரந்தர வைப்புத் தொகைகான டிடிஎஸ்-க்கு விலக்கு அளிக்கக் கோரும் 15GH படிவத்தை சமர்பிக்க முடியாது. அவர்களுக்கு அதிகப்படியான டிடிஎஸ் கட்டணம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

PAN இல்லாமல் FD ஐ முன்பதிவு செய்வதன் தாக்கங்கள் என்ன?

  • பயனாளருக்கு 20% அளவிற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்
  • வருமான வரித்துறையிடமிருந்து டிடிஎஸ் கிரெடிட்ஸ் பெற முடியாது
  • டிடிஎஸ் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது
  • 15GH  உள்ளிட்ட பிற வரிவிலக்கு படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது/ டிடிஎஸ் அபராதாமும் பொருந்தும்
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance
CM CHAIR உங்களுக்கு..மத்ததெல்லாம் எங்களுக்கு நிதிஷிடம் பாஜக டீலிங் | Nitish Kumar | Bihar Goverment
”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க; நவம்பர் 18-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்..
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
Embed widget