மேலும் அறிய

குருகிராமில் அமைகிறது 10 ஆயிரம் ஏக்கரில் உலகின் மிகப்பெரிய சஃபாரி: என்ன ஸ்பெஷல்?

ஹரியானாவில் உள்ள குருகிராமில் 10 ஆயிரம் ஏக்கரில் உலகின் மிகப்பெரிய சஃபாரி அமைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானாவில் உள்ள குருகிராமில் 10 ஆயிரம் ஏக்கரில் உலகின் மிகப்பெரிய சஃபாரி அமைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹரியானா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆரவல்லி மலைத்தொடரில் இந்த ஜங்கிள் சஃபாரி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது குருகிராம் மற்றும் நுஹ் மாவட்டங்களை உள்ளடக்கி அமையும்.

தற்போதைய நிலவரப்படி ஆப்ரிக்காவிற்கு வெளியில் துபாயில் உள்ள சார்ஜாவில் உள்ளது தான் மிகப்பெரிய சஃபாரி பூங்காவாக உள்ளது. இது 2000 ஏக்கரில் அமைந்துள்ளது. தற்போது ஆரவல்லியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பூங்காவானது 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதில் ஊர்வன, மிதப்பன, பறவைகள் புலிகள், சிங்கங்கள், தாவிர உண்ணிகள் என அனைத்து வகையான உயிர்களுக்கும் இடம் இருக்கும். அதேபோல் இதில் அண்டர்வாட்டர் வேர்ல்டு ஒன்றும் அமைக்கப்படும். தாவரவியல் பூங்காவும், பையோம் பகுதிகளும் இருக்கும் என்று ஹரியானா அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வுக்காகவே மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவும் ஹரியானா அமைச்சர் மனோகர் லால் கட்டாரும் சார்ஜா சென்றுவந்தனர். இந்த ஜங்கிளி சஃபாரி மூலம் சுற்றுலா துறை மேம்படுவதுடன் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஹரியானாவின் ஜங்கிள் சஃபாரி திட்டம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் ஹரியானா அரசாங்கத்தின் கூட்டு திட்டமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஹரியானாவிற்கு நிதி வழங்கும் என்று கட்டார் கூறினார்.

இரண்டு நிறுவனங்கள் ஈடுபடும்:

இந்த திட்டத்திற்காக உலகளாவிய ஆர்வத்தை வெளிப்படுத்தியது மற்றும் அத்தகைய வசதிகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் சர்வதேச அனுபவம் கொண்ட இரண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, முதலமைச்சர் கட்டார் கூறினார். இந்த நிறுவனங்கள் இப்போது பூங்காவை வடிவமைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் இயக்குவதற்கான சர்வதேச வடிவமைப்பு போட்டியில் போட்டியிடும். திட்டத்தை நிர்வகிக்க ஆரவல்லி அறக்கட்டளை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையம் இப்பகுதியில் மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டதாகவும், அத்தகைய பூங்கா அமைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

ஒருபுறம், ஜங்கிள் சஃபாரியை உருவாக்குவது ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்க உதவும், அதே நேரத்தில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சுற்றுலா வருவார்கள், உள்ளூர்வாசிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள். மேலும், ஹோம் ஸ்டே கொள்கையால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிராம மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரவல்லி மலைத்தொடரில் பல வகையான பறவைகள், காட்டு விலங்குகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.

இவை எல்லாம் இந்த சஃபாரியில் முக்கியத்துவம் பெறும். ஹரியானா அரசின் அறிக்கையின்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆரவல்லி மலைத்தொடரில் 180 வகையான பறவைகள், 15 வகையான பாலூட்டிகள், 29 வகையான நீர்வாழ் விலங்குகள் மற்றும் ஊர்வன மற்றும் 57 வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. இந்த சஃபாரி சர்வதேச கவனம் பெறும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget