மேலும் அறிய

Gujarat Reservations: குஜராத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பு.. ஸ்கெட்ச் போட்டு வேலை செய்த பாஜக அரசு 

மத்திய அரசு பணிகளை பொறுத்தவரையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்றேயிய வகுப்பினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. 

மத்திய அரசு பணிகளில் எவ்வளவு இடஒதுக்கீடு?

இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்றால், அமெரிக்க போன்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.

எனவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் நோக்கில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தேர்தலிலும் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது இடஒதுக்கீடு முறை. 

மத்திய அரசு பணிகளை பொறுத்தவரையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்றேிய வகுப்பினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டியல் சமூகத்தை (SC) சேர்ந்த மக்களுக்கு 15 விழுக்காடும் பழங்குடி சமூகத்தை (ST) சேர்ந்த மக்களுக்கு 7.5 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

மாநில அளவில் மாறுபடும் இடஒதுக்கீடு விகிதம்:

மாநில அரசு பணிகளில், மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு விகிதம் மாறுபடுகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் அதிக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பையே இரண்டாக பிரித்து, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 30 சதவிகிதமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 20 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டியல் சமூகத்திற்கு 18 சதவிகிதமும் பழங்குடி சமூகத்திற்கு 1 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

குஜராத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பு: 

இந்த நிலையில், குஜராத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி காந்திநகரில் காங்கிரஸ் ஒரு நாள் முழுவதுமாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியது. நிகழ்ச்சியில் பல்வேறு தலைவர்கள், பஞ்சாயத்துகளில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யாத பாஜக அரசை, கடுமையாக விமர்சித்தனர்.

அதேபோல, ஓபிசி மக்களுக்கான நலத்திட்ட பட்ஜெட்டை அதிகரிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டின. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்காக கடந்த ஜூன் 9ஆம் தேதி, ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.எஸ். ஜாவேரி அடங்கிய ஒரு நபர் குழுவை குஜராத் அரசு அமைத்தது.

கல்வியிலும் சமூக அளவிலும் பின்தங்கிய மக்களுக்கு மட்டும் இன்றி, பெண்களுக்கும் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget