மேலும் அறிய

பல்கலைக்கழக விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்கள்! கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல் - குஜராத்தில் பரபரப்பு!

விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat: விடுதியில் தொழுகை செய்த  இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

”இதுதான் தொழுகை செய்ய இடமா?”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில்  ஆப்பிரக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்டட நாடுகளைச்  சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அதாவது, இந்த பல்லைக்கழகத்தை சுற்றி எந்த ஒரு மசூதியும் இல்லை. தற்போது, ரம்ஜான் மாதம் என்பதால், விதியில் தங்கி இருக்கும் இஸ்லாமிய மாணவர்கள் விடுதியில் ஒரு இடத்தில் கூடி, இரவில் தொழுகை செய்கின்றனர். நேற்று விடுதியில் ஒரு இடத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிலர் கூடி தொழுகை செய்துள்ளனர்.

அப்போது, வெளியில் இருந்து விடுதிக்குள் வந்த சில கும்பல், தொழுகை செய்துக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. மாணவர்களை தாக்கியதை பார்த்த பாதுகாவலர் இதனை தடுக்க முயன்றார். அப்போது, அந்த கும்பல் பாதுகாவலரை மீறி மாணவர்களின் அறைகளை அடித்து உடைத்ததோடு, உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது. 

"உங்களை தொழுகை செய்ய யார் அனுமதித்தது. இது தொழுகை செய்ய இடமா? என்று கேட்டு, இஸ்லாமிய மாணவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.மர்ம கும்பலின் தாக்குதலில் வெளிநாட்டு மாணவர்கள் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இஸ்லாமிய மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்:

இஸ்லாமிய மாணவர்களை அடித்த கும்பல், அங்கிருந்த தப்பிச் சென்றுவிட்டது.  பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒருவரை அடையாளம் கண்டுள்ளோம். 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்கள் இருகிறது" என்றார். 

ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். இதுகுறித்து  அவர் கூறுகையில், "அவமானம். இஸ்லாமியர்கள் அமைதியாக தொழுகை செய்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் இதில் தலையிடுவார்களா? இஸ்லாமியர்கள் மீது காட்டப்படும் வெறுப்பு இந்தியாவின் நல்லெண்ணத்தை அழிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். 

தலைப்பு செய்திகள்

23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
EPFO புதிய அறிவிப்பு: இனி UPI மற்றும் ATM மூலம் PF பணம் எடுக்கலாம் – முழு விவரம்!
EPFO புதிய அறிவிப்பு: இனி UPI மற்றும் ATM மூலம் PF பணம் எடுக்கலாம் – முழு விவரம்!
Domestic Violence: ”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
”அது என் புள்ள தானா? DNA டெஸ்ட் எடுக்கணும்” 5 மாத கரு, 23 வயது இளம்பெண் தற்கொலை
Anand Ambani: திருப்பதியில் ஆனந்த் அம்பானி தலைமுடி காணிக்கை! மனமுருக வேண்டுதல்!
Anand Ambani: திருப்பதியில் ஆனந்த் அம்பானி தலைமுடி காணிக்கை! மனமுருக வேண்டுதல்!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Embed widget