மேலும் அறிய

புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

புதுச்சேரியில் சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்

புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவில் இருந்து காணொலி காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலர் அசோக் குமார், உள்ளாட்சி துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், செய்தித்துறை செயலர் உதயகுமார், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் ரவி பிரகாஷ், புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் 6 கிராமங்களும், காரைக்கால் மாவட்டத்தில் 4 கிராமங்களும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு, நான் கடிதம் எழுதி இருக்கிறேன். ஆனால், இந்த சாதனையை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சுதந்திர தினத்திற்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே எதிர்வரும் 3-வது அலையை சமாளிக்க முடியும். தடுப்பூசி போடுவதை நாம் தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக ஒரு வாரம் முழுவதும் தடுப்பூசி பிரச்சார வாரமாக கடைபிடித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் குறிப்பிட்ட கால அளவிற்குள் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். அரசு துறை செயலர்கள் தங்களது மேற்பார்வையில் உள்ள துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சலுகைகளை அறிவித்து ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள். அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என அவர் கூறினார்.


புதுச்சேரி : சுதந்திர தினத்துக்குள்ள தடுப்பூசி போட்டுக்கணும்! - துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்

கொரோனாவின் இரண்டாவது அலை தொற்றானது கிராமங்களில் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல் கட்டமாக பல்வேறு பயிற்சிகளும் மற்றும் மாபெரும் தடுப்பு ஊசி முகாம்களும் நடத்தப்பட்டன. இரண்டாவது கட்டமாக கொரோனா பற்றிய பல்வேறு பயிற்சிகளுடன் கூடிய 100 சதவீத தடுப்பூசி செலுத்தி முன்மாதிரி கிராமங்களாக செயல்பட புதுவை அரசின் ஊரக வளர்ச்சி துறையின் செயலாளர் ரவிபிரகாஷ் தலைமையில் 100% தடுப்பூசிபோடும் திட்டத்தை மூன்று வட்டாரங்களான வில்லியனூர்,அரியாங்குப்பம் மற்றும் காரைக்காலில் உள்ள கிராமங்களில் 100% கோரோனா தடுப்பூசி செலுத்திய முன்மாதிரி கிராமமாக உருவாக்க அறிவுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100% தடுப்பூசி எடுத்துக் கொண்ட முதல் கிராமமாக புதுக்குப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுக்குப்பம் கிராம மக்களிடம் வழங்கியது குறிப்படத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget