மேலும் அறிய

Parliament Special Session : எதிர்பார்ப்பை கிளப்பிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. மத்திய அரசின் ரகசிய திட்டம் என்ன?

பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது.

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். 

சிறப்பு கூட்டத்தொடர் எதற்கு?

அந்த வகையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதேபோல, பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது. ஆனால், இவை எதையுமே மத்திய அரசு உறுதி செய்யாமல் இருந்தது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான், சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதன் நோக்கத்தை மத்திய அரசு கடந்த 13ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் பற்றி விவாதிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் என்னென்ன?

நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், அதிலிருந்து கற்று கொண்டது என்ன? என்பது குறித்து சிறப்பு அமர்வில் விவாதிக்கப்பட உள்ளது. அதே சமயத்தில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், 'வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023' மற்றும் 'பத்திரிகை மற்றும் பதிவுசெய்தல் மசோதா, 2023' ஆகியவற்றை மக்களவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேல்குறிப்பிடப்பட்ட இரண்டு மசோதாக்களை மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. 
இதுமட்டும் இன்றி, தபால் நிலைய மசோதா, 2023ஐ மக்களலையில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமன மசோதா, விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை தவிர்த்து மேலும் கூடுதலான மசோதாக்கள் சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"மத்திய அரசின் ரகசிய திட்டம்"

நாளை மறுநாள் சிறுப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அழைப்பு அந்தந்த கட்சி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஒன்னும் இல்லாததற்கு சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டுமா என்றும் நவம்பர் மாதம் கூட்டப்பட உள்ள குளிர்காலக் கூட்டத்தொடர் வரை காத்திருந்திருக்கலாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பல சர்ச்சையான சட்டங்களை  இயற்ற மத்திய அரசு ரகசிய் திட்டம வைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Embed widget