மேலும் அறிய

Maharashtra: மேரி மாதாவாக மாறிய காளி சிலை.. சாமி கும்பிட வந்த பக்தர்கள் அதிர்ச்சி!

வழக்கமாக பாரம்பரியப்படி கருப்பு அல்லது அடர் நீல நிற தோலுடன் தான் காளி தெய்வத்தின் முகம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கோயிலில் அமைக்கப்பட்டிருந்த காளி தேவியின் சிலை ஒன்று அன்னை மேரியைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. 

இந்த நிலையில் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கோயிலின் பூசாரி கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையின் செம்பூரில் உள்ள  காளி கோயிலில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கோயில்  அனிக் கிராமத்தில் உள்ள இந்து தகன மைதானத்திற்குள் அமைந்துள்ளது. இந்த காளி கோவிலில் அப்பகுதி மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த நவம்பர் 22ம் தேதி சனிக்கிழமை ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதாவது காளி தேவி கோயிலில் மேரி மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது என பக்தர்கள் குழம்பிய நிலையில் காளி தேவிக்கு தங்க நிற அங்கிகளை அணிந்து, வெள்ளை அலங்காரங்களுடன் கூடிய பெரிய கிரீடத்தையும், மேலே ஒரு முக்கிய தங்க சிலுவையையும் அணிந்திருப்பதும் தெரிய வந்தது.

வழக்கமாக பாரம்பரியப்படி கருப்பு அல்லது அடர் நீல நிற தோலுடன் தான் காளி தெய்வத்தின் முகம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது. அந்த சிலை குழந்தை இயேசுவைக் குறிப்பதாகக் கருதப்படும் ஒரு குழந்தையின் உருவத்தை கையில் ஏந்தியிருப்பது போல் காட்டப்பட்டது. கோயிலின் பின்னணியும் ஒரு பெரிய தங்க சிலுவையைக் கொண்ட சிவப்புத் துணியால் மாற்றப்பட்டு தேவாலய இடம் போல காட்சியளித்தது. அலங்கார தேவதை விளக்குகள் மற்றும் இருபுறமும் டின்ஸல் மூடப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலின்  பக்தர்கள் கோயில் பூசாரியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது ​​அவர் தனது கனவில் காளி தெய்வம் தோன்றி, தன்னை அன்னை மேரியின் வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகக் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முதற்கட்டமாக  சிலை சேதப்படுத்துதல் பற்றி வதந்திகள் அல்லது மத ரீதியிலான கலவரம் ஏற்படுவதைத் தடுக்க, போலீசார் முன்னிலையில் காளி சிலை மேரி மாதா நிலையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் காளி மேரி மாதாவாக மாற காரணம் கனவா அல்லது வேறு யாரும் எதாவது சொன்னார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget