மேலும் அறிய

Maharashtra: மேரி மாதாவாக மாறிய காளி சிலை.. சாமி கும்பிட வந்த பக்தர்கள் அதிர்ச்சி!

வழக்கமாக பாரம்பரியப்படி கருப்பு அல்லது அடர் நீல நிற தோலுடன் தான் காளி தெய்வத்தின் முகம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கோயிலில் அமைக்கப்பட்டிருந்த காளி தேவியின் சிலை ஒன்று அன்னை மேரியைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. 

இந்த நிலையில் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கோயிலின் பூசாரி கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையின் செம்பூரில் உள்ள  காளி கோயிலில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கோயில்  அனிக் கிராமத்தில் உள்ள இந்து தகன மைதானத்திற்குள் அமைந்துள்ளது. இந்த காளி கோவிலில் அப்பகுதி மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த நவம்பர் 22ம் தேதி சனிக்கிழமை ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதாவது காளி தேவி கோயிலில் மேரி மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது என பக்தர்கள் குழம்பிய நிலையில் காளி தேவிக்கு தங்க நிற அங்கிகளை அணிந்து, வெள்ளை அலங்காரங்களுடன் கூடிய பெரிய கிரீடத்தையும், மேலே ஒரு முக்கிய தங்க சிலுவையையும் அணிந்திருப்பதும் தெரிய வந்தது.

வழக்கமாக பாரம்பரியப்படி கருப்பு அல்லது அடர் நீல நிற தோலுடன் தான் காளி தெய்வத்தின் முகம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோயிலில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது. அந்த சிலை குழந்தை இயேசுவைக் குறிப்பதாகக் கருதப்படும் ஒரு குழந்தையின் உருவத்தை கையில் ஏந்தியிருப்பது போல் காட்டப்பட்டது. கோயிலின் பின்னணியும் ஒரு பெரிய தங்க சிலுவையைக் கொண்ட சிவப்புத் துணியால் மாற்றப்பட்டு தேவாலய இடம் போல காட்சியளித்தது. அலங்கார தேவதை விளக்குகள் மற்றும் இருபுறமும் டின்ஸல் மூடப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலின்  பக்தர்கள் கோயில் பூசாரியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது ​​அவர் தனது கனவில் காளி தெய்வம் தோன்றி, தன்னை அன்னை மேரியின் வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகக் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முதற்கட்டமாக  சிலை சேதப்படுத்துதல் பற்றி வதந்திகள் அல்லது மத ரீதியிலான கலவரம் ஏற்படுவதைத் தடுக்க, போலீசார் முன்னிலையில் காளி சிலை மேரி மாதா நிலையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோயில் பூசாரி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் காளி மேரி மாதாவாக மாற காரணம் கனவா அல்லது வேறு யாரும் எதாவது சொன்னார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget