மேலும் அறிய

அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு? - கோவா அமைச்சர் ராஜினாமா

கோவாவில் அமைச்சர் மிலிந்த் நாயக் மீது பாலியல் மோசடி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கோவாவில் அமைச்சர் மிலிந்த் நாயக் மீது பாலியல் மோசடி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க.  ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் கோவா நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை  அமைச்சராக இருப்பவர் மிலிந்த் நாயக். இவர் பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 


அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு? - கோவா அமைச்சர் ராஜினாமா

நவம்பர் 30 அன்று, சாவந்த் தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் "பாலியல் சீண்டலில்" ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதங்கர் குற்றம் சாட்டியிருந்தார், மேலும் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாஜக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருவதாகக் கூறினார்.

பதினைந்து நாட்கள் கழித்து அரசாங்கம் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை என்றால், அவர் பெயரைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சோதங்கர் எச்சரித்திருந்தார்.  

இதையடுத்து கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதங்கர் நேற்று கூறுகையில்,  “மிலிந்த் நாயக்  தனது அமைச்சரவை உறுப்பினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். முதல்வர் சாவந்த் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மிலிந்த் நாயக்குக்கு எதிரான குற்றச்சாட்டை போலீசார் விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து அமைச்சர் மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிலிந்த் நாயக் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதை முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக மிலிந்த் நாயக் கோவா அரசாங்கத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து நேற்று இரவு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், “சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்காக நாயக் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தனிப்பட்டவை. அதற்கு அவர் என்ன செய்வார் என்பது அவரது தனிப்பட்ட முடிவு. காங்கிரஸ் என்ன ஆதாரம் கொடுத்தாலும் விசாரிக்கப்படும். விசாரணையில் அரசு என்ன உதவி செய்ய முடியுமோ அதை நூறு சதவீதம் செய்யும்.” எனத் தெரிவித்தார். 


அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு? - கோவா அமைச்சர் ராஜினாமா

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாயக் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு பாஜகவுக்கு பின்னடைவை தரலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 58 வயதான மிலிந்த் நாயக் மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் 2012ல் மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget