மேலும் அறிய

Cheetahs at Kuno Park: மீண்டும் 5 சிவிங்கிப் புலிகள் வனப்பகுதிக்குள் விடப்படும்.. தகவலை வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம்!

cheetahs at Kuno Park:வனப்பகுதிக்குள் விடப்படும் சிவிங்கிப் புலிகள்.

மத்திய பிரேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் பாதுகப்பட்ட பகுதியிலிருந்து  ஐந்து சிவிங்கிப் புலிகளை வனப் பகுதிக்குள் திறந்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் மாத மழை காலத்திற்குள் நமீபியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மேலும் 5 சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவிலிருந்து வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும், அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே திரும்பவும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் விடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நமீபியாவிலிருந்து அழைத்தவரப்பட்ட எட்டு சிவிங்கிப் புலிகளில் நான்கு ஏற்கனவே வனப்பகுதிகளில் விடப்பட்டுள்ளன. சிவிங்கிப் புலிகளின் உடல்நல ஆரோக்கியம்,  நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விட முடிவெடுக்கப்படுகிறது. 

 தென்னாப்பிரிக்காவில் உள்ள ப்ரீடோரியா பல்கலைக்கழக கால்நடை மருத்துவர் Adrian Tordiffe, உள்ளிட்ட முக்கிய நபர்களின் குழுவினர் சிவிங்கிப் புலிகளை கண்காணித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து சிவிங்கிப் புலிகளும் உடல்நலனோடு ஆரோக்கியமாக உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் திட்டம்:

இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையிலும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதற்காக நமீபியா அரசுடன், இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

அதையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அந்த சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய் பூங்காவில் விடப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் உள்ள சமீப தினங்களுக்கு முன்பு 'ஷாஷா' பெண் சிவிங்கிப் புலி மார்ச் 27 ஆம் தேதி இறந்தது. அந்த சிவிங்கி புலிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக இறந்ததாக கூறப்பட்டது. இது, நாட்டில் உள்ள பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிவிங்கிப் புலிகள் (cheetahs) ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. ஒரு காலத்தில்  இதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகையால் வேட்டையாடப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கிப் புலி இனத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. பின்பு, இந்தியாவில் சிவிங்கிப் புலி இல்லாமலே போனது. தற்போது  ப்ராஜெட்க் டைகர் (’Project Tiger') மூலம் இந்தியாவில் சிவிங்கிப் புலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவிங்கிப் புலிகள் காணப்பட்டன. பின்னர், 1952-இல் சிவிங்கிப் புலி இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிவிங்கிப் புலி வாழும் இடமாக இந்தியா இருக்க வேண்டுமென்றும், நாட்டில் சிவிங்கிப் புலியை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில், தென் ஆப்பிரிக்காவில் வாழும் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதோடு மட்டுமல்லாமல், ‘ சிவிங்கிப் புலி திட்டத்தை செயல்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (National Tiger Conservation Authority (NTCA)) வழிகாட்டும் நோக்கில் 3 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. 

இந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தியாவில் எந்தப் பகுதி அவை வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, இந்திய வனஉயிரிகள் மையத்தின் (டபிள்யூ.ஐ.ஐ.) ஆய்வின் முடிவில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிவிங்கிப் புலி வாழ்வதற்கான சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலி வசிப்பதற்கான தகுந்த சூழல் காணப்படுவதாக ஆய்வுக் குழு தெரிவித்திருந்தது. அதன்படி, இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளை அழைத்துவர கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4 குட்டிகள்:

இந்நிலையில், சியாயா என்ற பெண் சிவிங்கி புலியானது 4 குட்டிகளை ஈன்றது. பிறந்த குட்டிகள் கூண்டில் பாதுகாப்பாக வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளன.


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget